கோயம்புத்தூர், நவ. 4- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் சூலூரில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தின் நிறைவில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் ஹன்னன் முல்லா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஒன்றிய அரசு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் அறிக்கையை அமல்படுத்த வேண்டும். மழை, வெள்ளம், வறட்சி உள் ளிட்ட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப் படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். தேங்காய் கொப்பரை ரூ.150 க்கும் பால் லிட்டர் ரூ.45 க்கும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும். இதுவரை இந்தியாவில் இருந்த எல்லா அரசுகளும் விவசாயிகளுக்கு எதிராகவே இருந்து உள்ளன. அதிலும் மோடியின் அரசு விவ சாயிகளை கார்ப்பரேட்டுகளுக்கு அடிமை ஆக்கும் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்” என சாடினார். காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில ளித்து பேசிய அவர், “யாருடைய உரிமை களும் பறிக்கப்படாத வகையில் ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் நடந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் தெளி வாக தெரிவித்துவிட்ட பிறகு, ஒரு மாநில அரசு தண்ணீர் தர மறுத்தால் அதனை பெற்றுத்தர வேண்டிய கடமை ஒன்றிய அர சுக்கு தான் உள்ளது. ஆனால் அதனை செய்யாமல் மக்களை பிரித்து அரசியல் செய்யவே ஒன்றிய பாஜக அரசு விரும்பு கிறது. இந்த விவகாரத்தில் விரைவில் உரிய தீர்வு கிடைக்க வேண்டும்” என் றார்.