states

நம் அனைவருக்கும் பொதுவான வீட்டைப் பாதுகாக்க பங்களிப்போம்!

புதுதில்லி, ஏப்.22- நம் அனைவருக்கும் பொதுவான இந்த  வீட்டை பாதுகாக்க நமது பங்களிப்பை வழங்குவோம் என்று ஐநா பொதுச்செய லாளர் அண்டோனியோ குட்டெரஸ் புவி தினச் செய்தியில் கூறியுள்ளார். உலக அளவில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வேகமாக உயர்ந்து வருவதன்  காரணமாக இந்தியப் பெருங்கடலில் மேற்  பரப்பு வெப்பநிலை 29 முதல் 39 டிகிரி செல்சி யஸ் வரை உயர்ந்துள்ளதாகவும்,  இது  இயல்பை விட 1.2 டிகிரி செல்சியஸ் அதி கம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் காரணமாக பருவமழை  தாமதமாகவோ அல்லது வெள்ளப் பெருக்கு ஏற்படும் அளவுக்கு அதிகமா கவோ பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் மேலும் கடலுக்கு அடி யில் இருக்கும் பவளப்பாறைகள் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்  பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள் ளது. உலகில் மிக வெப்பமான கடல் பகுதி யாக இந்திய பெருங்கடல் மாறி வரும் நிலை யில் இது பருவமழைக்கு எத்தகைய தாக் கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்குறி வானிலை ஆய்வாளர்கள் மத்தியில்  பேசு பொருளாக இருந்து வருகிறது.

நாட்டின் 6 ஆயிரத்து 965 தாலுகாக் களில், மொத்தம் 2 ஆயிரத்து 529 தாலுகாக்  களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது;  1960-ஆம் ஆண்டுகளில் நம்முடைய விவசாயத்துக்கான பாசனத்தில் 29 சதவீத மாக இருந்த நிலத்தடி நீரின் பங்கு, இப் போது 68 சதவீதமாக அதிகரித்துள்ளது. விவசாயப் பரப்பும் அதிகரித்திருக்கிறது.  இந்தச் சூழலில் புவி தினத்தையொட்டி, ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ  குட்டெரஸ் வெளியிட்டுள்ள பூமி தின செய்தி யில், ‘’பூமியைப் பாதுகாக்க ஒவ்வொரு வரும் குரல் கொடுக்க வேண்டும். இயற்  கையுடன் இயைந்த திட்டங்களைச் செயல் படுத்துமாறு தலைவர்களை மக்கள்  வலியுறுத்த வேண்டும். மக்களின் நல னுக்காகவும், கிரகத்தின் நலனுக்காகவும், வரும் தலைமுறையினரின் நலன்களுக் காகவும் நாம் அனைவரும் நம் அனை வருக்கும் பொதுவான இந்த வீட்டைப் பாது காக்க நமது பங்களிப்பை வழங்குவோம்’’ எனத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தி யில், நமது பூமியின் மேம்பாட்டிற்காக பணி யாற்றும் அனைவரின் முயற்சிகளையும் பாராட்டுகிறேன். இயற்கையுடன் இயைந்த வாழ்வு என்ற நமது கலாச்சாரத்துடன் தொடர்புடைய நிலையான வளர்ச்சியை  மேம்படுத்துவதில் இந்தியா உறுதிபூண் டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். ஆதிசிவனுக்கு சிலை வைப்பதாக கூறிக் கொண்டு காட்டு மரங்களை அழித்த வர்  கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ். இதனால் யானைகளின் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டு யானைகள் திசைமாறி  ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. இவ ரது வன ஆக்கிரமிப்பை எதிர்த்த பழங்குடி  மக்கள் மீது கொடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. காட்டு மரங்களை அழித்த  ஜக்கி வாசுதேவும் பூமி தினத்திற்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.  அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘’பூமியும்  மண்ணும் உயிருள்ள பொருட்கள். பேரழி வின் விளிம்பில் இருந்து சுற்றுச்சூழலைக் காப்பதற்கு மனிதநேயத்துடன் நாம் அனை வரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்  டும். இது நடக்கும்; நடக்கச் செய்வோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.