states

உலகச் செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி நாடாளு மன்றத்தில் உரையாற்றும் நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை என கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளு மன்றக் குழு தெரிவித்துள்ளது. கிரீஸ் நாடாளுமன்றத் தில் ஏப்ரல் 7 ஆம் தேதியன்று செலன்ஸ்கி உரையாற்று கிறார். தற்போது எழுந்துள்ள பிரச்சனையின் ஒரு அங்கமாகவே செலன்ஸ்கி இருக்கிறார். உக்ரைன் மக்க ளோடு நிற்பது என்பது பிரச்சனைக்குக் காரணங்களில் ஒருவரான செலன்ஸ்கிக்கு ஆதரவாகி விட முடியாது என்று கிரீஸ் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

கடுமையான உள்நாட்டுப் போரை சந்தித்து வரும் எத்தியோப்பியாவிற்கு கடந்த மூன்று மாதங்க ளில் முதன்முறையாக உணவுப் பொருட்களை ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்ட அமைப்பு அனுப்பியுள்ளது. 13 சரக்கு வாகனங்களில் செல்லும் இந்த நிவாரண உதவி, எத்தியோப்பியாவின் வடக்கு டைக்ரே மாகாணத்தை சென்றடைந்திருக்கிறது. மேலும் பல வாகனங்களும், எரிபொருளும் விரைவில் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பிரான் சின் ஜனாதிபதித் தேர்தல் பரபரப்பான சூழலை எட்டியுள்ளது. போட்டியாளர்கள் அனைவரின் புகைப் படங்களும் அடங்கிய பெரிய சுவரொட்டிகள் ஒட்டப் பட்டு வருகின்றன. முதல் சுற்றில் எந்த வேட்பாள ருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், முத லிரண்டு இடங்களைப் பெறும் வேட்பாளர்கள் இரண் டாவது சுற்றில் பங்கேற்பார்கள். இரண்டாவது சுற்றுக் கான வாக்குப்பதிவு ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெறும்.