மதுரை, மே 1- மதுரை புது நத்தம் சாலை யில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.545 கோடி செலவில் பறக்கும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. மதுரை தல்லாகுளம் முதல் செட்டிக்குளம் வரை 7.5 கிலோ மீட்டர் தொலை வுக்கு நடைபெற்று வரும் பணி களை முடித்து இந்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்த நிலை யில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி நிகழ்ந்த விபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததால் பணிகள் சற்று தாமதமடைந்தன. இந்நிலையில், சனிக்கிழ மையன்று இரவு 10 மணி அள வில் இரு பாலத்தை இணைக் கும் முயற்சியில் தொழிலா ளர்கள் ஈடுபட்டனர். 2 பாலத் தின் தூண் இணைப்பாக வைக்கக்கூடிய ஹைட்ராலிக் கிரேன் பொருத்தும் பணி நடைபெற்றது. அப்போது கிரேனின் ஒரு பக்கத்தில் இருந்து மற் றொரு பக்கம் செல்லக் கூடிய கம்பி திடீரென பயங்கர சத் தத்துடன் அறுந்து விழுந்த தில் கீழே நின்று கொண்டி ருந்த மதுரை திருப்பாலை யைச் சேர்ந்த விஷ்வா மற்றும் பாலம் கட்டுமான பணியாளர் தஞ்சாவூரைச் சேர்ந்த பாஸ் கர் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். காயமடைந்த இருவருக்கும் தனியார் மருத் துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலை யில் காயம் அடைந்தவர் சார் பாக கட்டுமானப் பணியில் ஈடு பட்டுள்ள தனியார் நிறுவனத் தின் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது.