states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மாண்டஸ் புயல் காரண மாக தமிழ்நாட்டில் அதிக பட்சமாக திருவண்ணா மலை மாவட்டத்தில் 25 செ.மீ மழை பதிவாகியது.

நாட்டில் கடந்த 5 ஆண்டு களில் 7.20 லட்சம் பேர்  தற்கொலை செய்துள்ள னர். இதில் 2.50 லட்சம்  பேர் 18-29 வயதுடைய வர்கள் ஆவர். தமிழ்நாட்  டில் 77,656 பேர்  தற் கொலை செய்துள்ளனர் என ஒன்றிய அரசு நாடா ளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

பணமோசடி வழக்கில் சத்தீஸ்கர் முதல்வரின் துணைச் செயலாளர் சவு மியா சவுராசியான் சொத்  துக்களை பறிமுதல்  செய்தது அமலாக்கத் துறை. டிசம்பர் 14-ஆம் தேதி வரை மேலும் 4 நாட்  கள் காவலில் எடுத்து  விசாரிக்க அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது.

மாண்டஸ் புயலால் மேற் கூரை இதர பொருட்கள் சேதமடைந்ததில் சென்னை மெட்ரோவுக்கு  ரூ.3.45 கோடி இழப்பு ஏற்பட் டுள்ளதாக மெட்ரோ நிர்  வாகம் தகவல் தெரிவித் துள்ளது

அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்ட ணியையும், பல்வேறு முக்கியமான சர்வதேசப் பிரச்சனைகளில் தங்கள் நாடு எடுத்த “நடுநிலை” நிலைப்பாட்டையும் ஆஸ்திரிய கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்துள்ளது. நடுநிலை என்று சொல்லிக்  கொண்டாலும் உலகமயமாக்கப்பட்டுள்ள முதலாளித்துவத்தின் அனைத்து அநீதி நடவடிக்கைகளிலும் பங்கேற்றே வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ள கம்யூனிஸ்ட் கட்சி, குறிப்பான மாற்றம் தேவைப் படுகிறது என்று வலியுறுத்துகிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடனில் உள்ள குடும்பங் கள் அவ்வப்போது மின் விநியோகம் இல்லாமல் இருக்க வேண்டி யதிருக்கும் என்று அந்நாட்டின் பிரதமர் உல்ப் கிரிஸ்டெர்சன் எச்ச ரித்துள்ளார். மின் கட்டணம் அதிகம் என்பதற்காக பல குடும்பங்கள் மின்சாரத்தை சேமித்தனர். தற்போது மின்வெட்டைக் குறைப்பதற்காக  பாதுகாக்க வேண்டும் என்று அவர்களை நாங்கள் கேட்டுக்கொள்ள விரும்புகிறோம் என்று கூறியுள்ளார். 2021 ஆம் ஆண்டில் உபரி மின்சா ரத்தை ஸ்வீடன் ஏற்றுமதி செய்த நாடு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

10 ஆயிரம் பெண்களின் கருக்கள் கலைக்கப்பட்டதாக வெளி யாகியுள்ள செய்திகள் குறித்து தீவிரமான விசாரணை நடத்த வேண்டும் என்று நைஜீரிய அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கோரிக்கை வைத்துள்ளார். 2013 ஆம் ஆண்டில் இருந்து ரகசியமாகவும், திட்ட மிட்ட வகையிலும் இந்த சட்டவிரோத கருக்கலைப்பு நைஜீரிய ராணு வத்தால் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி யிருக்கின்றன.