சென்னை,செப்.24- அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற முடி வில் மாற்றுக் கருத்து இல் லை என்று அதிமுக மூத்த நிர்வாகி ஜெயக்குமார் கூறி யுள்ளார். அதிமுக தலைவர்கள் குறித்து பாஜக மாநிலத் தலை வர் அண்ணாமலை தரக் குறைவாக பேசி வரு வதாக அக்கட்சியின் தலை வர்கள் கண்டனம் தெரிவித் துள்ளனர். அதிமுக தொண் டர்கள் மத்தியிலும் கொந்த ளிப்பு எழுந்துள்ளது. பாஜக வுடன் கூட்டணி வேண்டாம் என்று பல மாவட்டங்களில் அதிமுகவினர் போஸ்டர் அடித்து ஒட்டினர். பின்னர் இரு கட்சிகளின் தலைமை யும் திடீரென்று சமரசமா னது. ஆனாலும் அதிமுக குறித்து பாஜகவினர் மற் றும் பாஜக நிர்வாகிகளின் அவ தூறு பேச்சு நின்றபாடில்லை. இந்நிலையில், ஞாயி றன்று சென்னையில் அதி முக மூத்த நிர்வாகி டி.ஜெயக் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுக கூட் டணியில் பாஜக இல்லை என்ற கருத்தில் எந்தவித மான மாறுபட்ட கருத்தும் இல்லை. நாளை (இன்று) எம்ஜிஆர் மாளிகையில், அதி முக மாவட்டச் செயலாளர் கள் கூட்டம் நடைபெற இருக் கிறது. கூட்டம் நடைபெற வுள்ள சூழலில் வேறு எந்த கருத்தும் தெரிவிக்க இய லாது. ஒருநாள் காத்திருந் தால், மாவட்டச் செயலாளர் கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை ஊடகங்களில் அறிவிக்கிறேன். சோதனை பூச்சாண்டி களுக்கு எல்லாம் அதிமுக வினர் பயப்படமாட்டார்கள். 1972 முதல் அதிமுக பல சோதனைகளை தாண்டி வந்த இயக்கம். தமிழக மக்க ளின் பிரச்சனைகளுக்காக வே ஒன்றிய அமைச்சரை அதிமுக நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். ஒன்றிய அமைச்சரிடம் கட்சி சார்ந்து எதுவும் பேசவில்லை. பல நெருக்கடிகளுக்கு மத்தி யில்தான் அதிமுகவை இரு முறை ஜெயலலிதா வெற்றி பெற வைத்தார். கூட்டணி யைப் பொறுத்தவரையில், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று கடந்த 18-ஆம் தேதி எடுத்த முடிவில் மாற்றம் இல்லை” என்று தெரிவித்தார்.