states

img

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தது

குமுளி, ஆக.17- முல்லைப் பெரியாறு மற்றும் வைகை  அணைகளின் நீர்மட்டம் மேலும் குறைந்தது. கோடை காலம் நீடித்தால், தமிழகத்தில் விவ சாயம் மற்றும் மின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு, கடுமையான குடிநீர்ப் பிரச்சனையும் ஏற்படும். நீர் மட்டம்  வீழ்ச்சியடைவது தேக்கடி படகு சவாரியை யும் மோசமாகப் பாதிக்கும். முல்லைப் பெரியாறு அணையில் கடந்த  ஆண்டை விட 17 அடி தண்ணீர் குறைவாக உள் ளது. கடந்த ஆண்டை விட வைகையில் 21 அடி தண்ணீர் குறைவாக உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளான மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகநதி ஆகிய அணைகளில் மிகக் குறைந்த அளவு  தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் சோத்துப்பாறை அணையில் 126.11  அடி தண்ணீர் இருந்த நிலையில், தற்போது 71.24 அடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 55 அடி தண்ணீர் குறைவாகும். புதனன்று காலை 6 மணியளவில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.20 அடியாக இருந்தது. நீர்மட்டம் 110 அடிக்கு கீழ் குறைந்தால் தேக்கடியில் படகு  சவாரி தற்போதைய சூழ்நிலையில் பாதிக் கப்படலாம். தொடர்ந்து ஒரு மாதம் மழை  பெய்யாமல், தமிழகம் தண்ணீர் கொண்டு சென் றால், நீர்மட்டம் 110 அடிக்கும் கீழே செல்லும். நீர்வரத்து குறைந்ததால், லோயர்கேம்ப் பவர்ஹவுஸ் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது. லோயர் கேம்ப் பவர்ஹவுஸ் நான்கு ஜெனரே ட்டர்கள் மூலம் தினசரி 180 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. இது தவிர முல்லைப் பெரியாறு நீரை நம்பி வைகை ஆற்றில் பல சிறிய மின் உற்பத்தி அலகுகள் உள்ளன. இவை அனைத்தும் ஏற்கனவே நெருக்கடியில் உள்ளன. தென் தமிழகத்தின் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விவசாயத்திற்கும், லட்சக்கணக்கான மக்களின் குடிநீருக்கும் முக்கியமாக முல்லைப் பெரியாறு நீரை நம்பியுள்ளன. குமுளி, சக்குபள்ளம், வண்டன்மேடு போன்ற ஊராட்சிகள் நன்னீருக்கு முல்லைப் பெரியாற்றை நம்பியுள்ளன. மழை பெய்யாமல், அணையில் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.