புதுதில்லி, ஏப்.23- வடமாநிலங்களில் மின் வெட்டு மிக மோசமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் மின் வெட்டு உச்சம் தொட்டுள்ளது. நாடு முழுவதும் நிலக்கரித் தட்டுப்பாட் டாலும், மோடி அரசின் அலட்சியத்தா லும், வடமாநிலங்களில் மின் தடை அதி கரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக பஞ் சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்க ளில் பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின் வெட்டு செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் 8 மணி நேரம் கூட மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக என்டிடிவி (NDTV) ஆங்கில ஊடகம் விரிவான செய்தி வெளியிட்டு உள்ளது. தென்னிந்தியாவில் ஆந்திரப்பிர தேசத்தில் மட்டும்தான் மிக மோசமான நிலைமை உள்ளதாக அது தெரிவித்துள்ளது. குஜராத்தில் பொதுவாக தொழிற் சாலைகள் 7 நாட்களும் இயங்கும். ஆனால் அங்கு மின்சார தட்டுப்பாட்டால் கடந்த 1 மாதமாக தொழிற்சாலைகளுக்கு வாரம் 1 நாள் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்தியாவில் மின் தேவையில் 70 சத விகிதத்தை பூர்த்தி செய்வது நிலக்கரி மூல மான மின்சாரமாகத்தான் உள்ளது. அந்த வகையில், இந்தியாவிற்கு ஏப்ரல் முதல் வாரம் 453 வேகன்ஸ் நிலக்கரி தேவைப்பட் டது. ஆனால் கைவசம் இருப்பு இருந்தது என்னவோ 379 வேகன்ஸ் மட்டுமே. இத னால், நிலக்கரி தேவை 9 சதவிகிதம் அதி கரித்துள்ளது. இதுதான் மின் தடைக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. உக்ரைன் - ரஷ்ய போர் காரணமாக நிலக்கரி இறக்குமதி குறைந்திருப்பது,
பொதுவாகவே கோடைக் காலங்களில் நிலக்கரி கிடைப்பது குறைவது ஆகி யனவும் காரணமாக கூறப்பட்டாலும், இது ஒவ்வொரு ஆண்டும் நடப்பதுதான் என்ற நிலையில், ஒன்றிய பாஜக அரசு இதுபற்றி முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கேள்வியாக உள்ளது. 12 மாநிலங்களில் இருக்கும் நிலக்கரி யை வைத்து இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடியும் என்று ஆல் இந்தியா பவர் எஞ்சினியர் பெடரேஷன் தலைவர் சைலேந்திர துபே, இரண்டு நாட்களுக்கு முன்பு பேட்டி ஒன் றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பி டத்தக்கது. அந்த அடிப்படையிலேயே, நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, உத்தரப் பிர தேசம் குஜராத், உள்ளிட்ட மாநிலங் கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக என்டிடிவி உள்ளிட்ட தேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ஜார்க்கண்ட், ஹரி யானா, உத்தரப்பிரதேசம், பீகார், தெலுங் கானா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்க ளில் கடுமையான மின் தடை ஏற்படும். அதி லும் ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜ ராத், பஞ்சாப், ஜார்க்கண்ட் ஆகிய மாநி லங்களில் மின் தடை அதிகமாக இருக்கும் என்று அவை எச்சரித்துள்ளன.