states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மோடி மற்றும் அவரது துதிபாடிகளின் பொய் அம்பலமானது!

செங்கோல் ஆட்சிமாற்றத்திற்கான அடையாளமாக, மவுண்ட் பேட்டனிடம் கொடுத்து நேரு விடம் வழங்கப்பட்டதற்கு ஆவணங்கள் இல்லை என்று திருவாவடுதுறை ஆதீனம், ‘தி இந்து’ நாளிழுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்நிலையில், “பாஜகவின் போலித்தகவல் மூட்டை  வெளிப்படுத்தப்பட்டு விட்டது. அதுவும், திருவாவடுதுறை ஆதீன சுவாமிகளாலேயே, வெளிப் படுத்தப்பட்டுள்ளது” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்  ளார். மவுண்ட் பேட்டன் இல்லை. ராஜாஜி கிடையாது. 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று ஆட்சி மாற்றத்துக்கு இது (செங்கோல்) அங்கம் வகிக்கவில்லை. ஆனால், அந்த கம்பீரமான செங்கோல் உண்மையில் நேருவுக்குக் கொடுக்கப்பட்டது. இன்றைய மன்னர் மற்றும் அவரது துதிபாடிகளின் பொய்களுக்கு மாறாகவே உண்மைகள் உள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.

‘சிவனின் திரிசூலம்’, ‘இந்திரனின் வஜ்ராயுதம்’ கண்டுபிடிப்பு?

பிலிப்பைன்ஸ் நாட்டில் தொழிலதிபராக இருந்துவரும் சையத் சமீர் உசேன் என்பவர் தனது  சுரங்கத்தில் இரும்பு, தங்கம் வெட்டியெடுக்கும்போது, கடந்த 2015-இல், 200 அடி ஆழத்தில்  சிவனின் திரிசூலமும், இந்திரனின் சிலையும் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது. அவர், இதனை தில்லியில் உள்ள தொல்லியல் துறையிடம் ஆய்வுக்காக அளித்த நிலையில், “சிவனின் திரிசூலம்  10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது” என்றும், “இந்திரனின் வஜ்ரா ஆயுதம் 3 ஆயிரம் ஆண்டு கள் பழமையானது” என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக சையத் சமீர் உசேன் கூறியுள்ளார்.

காந்தியைக் கொன்றாலும் கோட்சே இந்தியாவின் புதல்வனாம்!

“பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், வழித்தோன்றல்களை அடையாளம் காண்பதில் நிபுணராக இருக்கிறார். அப்படியே அவர் கோட்சே-வின் வழித்தோன்றல்களையும் அடையாளம் கண்டால் நன்றாக இருக்கும்” என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி கூறி யிருந்தார். இதற்கு ஒன்றிய இணையமைச்சர் கிரிராஜ் சிங் பதிளித்துள்ளார். அதில், “கோட்சே காந்தி யைக் கொலை செய்திருந்தாலும் கூட அவர் இந்தியாவில் பிறந்தவர். இந்தியாவின் மதிப்பு மிக்க  மகன். பாபர், அவுரங்கசீப் போல் படையெடுத்து வந்த முகலாயர்கள் அல்ல. அதனால் அவுரங்கசீப்,  பாபரை, திப்பு சுல்தானைக் கொண்டாடுபவர்கள் இந்தியாவின் மகன்களாக இருக்க இயலாது” என்று ஆணவமாக பேசியுள்ளார்.

5 மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை மாற்றி கார்கே நடவடிக்கை

குஜராத் தோல்வியைத் தொடர்ந்து, அங்கு தலைவராக இருந்த ஜெகதீஷ் தாக்கூர் தனது பதவி யை ராஜினாமா செய்து விட்டார். தற்போது அவருக்கு பதிலாக சக்திசிங் கோகில் புதிய தலை வராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுவை காங்கிரஸ் தலைவராக இருந்து ஏ.வி. சுப்பிரமணியம் மாற்றப்பட்டு, வைத்திலிங்கம் எம்.பி. புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல  ஹரியானா மற்றும் தில்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக தீபக் பாபாரிய நியமிக்கப் பட்டுள்ளார். மும்பை மண்டல காங்கிரஸ் தலைவராக இருந்த பாய் ஜெகதீப் மாற்றப்பட்டு, அந்த இடத்திற்கு பெண் எம்எல்ஏ வர்ஷா கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

4 அமைச்சர்களை நீக்க, ஷிண்டேவுக்கு அமித்ஷா கட்டளை?

“அமைச்சரவை மாற்றம் குறித்து அமித் ஷா சில தகவல்களை ஷிண்டேவிடம் தெரி வித்துள்ளார். அவர் கூறியபடி விரிவாக்கம் நடைபெற்றால் ஷிண்டே, அவரது முக்கிய மான நான்கு அமைச்சர்களை நீக்க வேண்டியிருக்கும். இது என்னுடைய தகவல்’’ என்று சிவ சேனா (உத்தவ் அணி) எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். ஆனால், சிவசேனா (ஷிண்டே  அணி) செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஷிர்சத் இதனை மறுத்துள்ளார். ‘’மற்றவர்கள் விவகாரத்தில்  மூக்கை நுழைக்கும் அவருடைய பழக்கமாக இது இருக்கலாம்’’ என ஷிர்சத், ராவத்தை விமர்சித்துள்ளார்.

அரசியல் அழுத்தத்திற்கு அமலாக்கத்துறை பலியாகக் கூடாது!

“ராஜஸ்தானின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை கடந்த திங்கட்கிழமையன்று சோதனை நடத்தியது. ராஜஸ்தானில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடை பெற இருப்பதால், இதுபோன்ற சோதனைகள் வரும் என்பதை, நான் எதிர்பார்த்தேன். ஒன்றிய அரசு, தொடர்ந்து அரசியல் நோக்கங்களுக்காக அமலாக்கத் துறையைப் பயன்படுத்துகிறது. அம லாக்கத் துறை அதிகாரிகள் அழுத்தத்தின் கீழ் பணியாற்றுகிறார்கள். இதுபோல் அழுத்தத்தின் கீழ் பணியாற்றாதீர்கள் என நான் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

கொலை மிரட்டலால் நான் அச்சமடையவில்லை: சரத் பவார்

தனக்கு வாட்ஸ்ஆப் மூலம் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறித்து, தேசியவாத காங்கி ரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி அளித்துள்ளார். அதில், “நாட்டின் குடிமக்கள் ஒவ்வொ ருவருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க உரிமை இருக்கிறது. அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்த உரிமை உண்டு. இதுபோன்று அச்சுறுத்தல் விடுப்பதன் மூலம் ஒருவர் பேசுவதை நிறுத்தி விடலாம் என சில நேரங்களில் சிலர் கருதுகிறார்கள். ஆனால், இது தவறான எண்ணம். காவல் துறை மீதும், சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்ப வர்கள் மீதும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எனவே, இந்தக் கொலை மிரட்டல் குறித்து நான் அச்சம் கொள்ளவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆம் ஆத்மி எம்.பி.க்கான அரசு பங்களா ஒதுக்கீடு திடீர் ரத்து

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தாவுக்கு, பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஜூலை 6, 2022 அன்று, பண்டாரா பூங்காவில் உள்ள C-1/12, வகை-VI பங்களா ஒதுக்கப்  பட்டது. எனினும், ராகவ் சத்தா மாநிலங்களவைத் தலைவரிடம் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டு,  அவருக்கு வகை-VII பங்களா ஒதுக்கப்பட்டது. புதுப்பிப்புப் பணிகள் முடிந்த பிறகு, ராகவ் சத்தா,  தனது பெற்றோருடன் அங்கு வசிக்கத் தொடங்கினார். வகை-VII பங்களா ஒதுக்கீட்டை ஒன்றிய  அரசு திடீரென ரத்து செய்தது. இதனை எதிர்த்து ராகவ் சத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள் ளார். மேலும், எனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை ரத்து செய்தது நிர்வாக முடிவு அல்ல; இது பாஜக வின் பழிவாங்கல் நடவடிக்கையின் பிரதிபலிப்பாகும். மேலும், இது தன்னை மிரட்டி அமைதிப் படுத்தும் முயற்சியாகும் என்று ராகவ் சத்தா கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகளுக்குப் போட்டியாக பாஜகவும் ஆலோசனை

2024 மக்களவைத் தேர்தலில், பாஜக-வுக்கு எதிராக ஓரணியில் திரள எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதுதொடர்பாக ஜூன் 23 அன்று ‘பாட்னா சங்கமம்’ என்ற  கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. ஏற்கெனவே இமாசலப்பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் கிடைத்த தோல்வியால் பாஜக அச்சம் அடைந்துள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் அணி சேர்க்கை அந்த அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இதையடுத்து, பாஜக-வும் 2024 நாடா ளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறது. ஜூன் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த  கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்புகேட்க வைகோ வலியுறுத்தல்

சென்னை, ஜூன்10- தேசப்பிதா மகாத்மா காந்தியை கொன்றவர்களை புகழ்ந்து பேசிய ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று மதிமுக பொதுச்செயாலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் கிரிராஜ் சிங் பீகாரில் பத்திரி கையாளர் சந்திப்பில் பேசும்போது, “நாதுராம் கோட்சே இந்தியாவின் மரியாதைக்குரிய நபர்; அவர் பாபர், ஒளரங்கசீப் போன்ற முகலாயர்கள் போல் படையெடுத்து வந்தவர் அல்ல.  ஆகையால் தங்களை பாபர், ஒளரங்க சீப் வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்பவர்கள் நிச்சயமாக பாரத அன்னையின் மகனாக இருக்க முடியாது,” என்று கூறியிருக்கிறார். பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே இந்துத்துவ சனாதன சக்திகள் மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சாவர்க்கர் போன்றோரை புகழ்ந்து பேசுவது கடும் கண்டனத்துக்கு உரியது. தேசப் பிதா மகாத்மா காந்தி யைக் கொன்ற கோட்சேயைப் புகழ்ந்து பேசிய ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும். உடனடியாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

வெயிலின் தாக்கம் குறையவில்லை மக்கள் கடும் அவதி 

சென்னை, ஜூன் 10- கத்திரி வெயில் முடிந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. சென்னை, மதுரை, வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 100 சதவீதத்திற்கும் மேல்  வெயில் அடித்து வருகிறது.  சென்னையில் வெள்ளிக்கிழ மையும் சனிக்கிழமையும் கடுமை யான வெயில் மக்களை வாட்டி  வதைத்தது. வானம் கறுத்து காணப்பட்டாலும் மழை பெய்ய வில்லை. சில இடங்களில் தூரல்  தான் விழுந்தது. இந்தநிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழ் நாடு, புதுச்சேரி, காரைக்காலின் ஓரிரு  இடங்களில் வரும்  செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்கள் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலையில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள பிப்பர்ஜாய் புயல் மேலும் வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு திசையிலும் அதன்பிறகு வடக்கு-வடமேற்கு திசையிலும் நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.