சென்னை, ஏப். 7- அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்து வப் படிப்பில் 7.5 விழுக்காடு சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித் திருக்கும் தீர்ப்பு சமூக நீதிக்கான சட்டப் போராட்டத்தில் கிடைக் கும் மூன்றாவது வெற்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேர வையில் வியாழனன்று(ஏப்.7) கேள்வி நேரம் முடிந்ததும், மருத்துவம் மற்றும் தொழிற் கல்வி படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு முன்னுரிமை அடிப்படையிலான ஒதுக்கீடு மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “2020-2021 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்க ளுக்கு மருத்துவப் படிப்புக் கான மாணவர் சேர்க்கையில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கிய தையும், முன்னாள் நீதிபதி த.முருகேசன் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கை யின்படி, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் 7.5 விழுக்காடு இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கிட “இளநிலை தொழிற் கல்வி படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம்’’ இயற்றப் பட்டதையும் சுட்டிக்காட்டினார். அரசு ஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்கு கள் தொடரப்பட்டு, இருதரப்பு வாதங்களும் முடிவுற்று, நமக்கு சாதகமான தீர்ப்பு வெளி யாகியுள்ளது. இட ஒதுக்கீட் டிற்கு உயர் நீதிமன்றம்தந்துள்ள மிகப் பெரிய அங்கீகாரம். இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 10 மாத காலத்தில், சமூக நீதிக்கான சட்டப் போராட்டத் தில் கிடைக்கும் மூன்றாவது வெற்றி இந்தத் தீர்ப்பு. சமூக நீதியை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் நிலைநாட்டி, நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையை தமிழகம் தொடர்ந்து செய்யும். அதற்காக அயராது உழைத் திடுவோம் என்றும் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு அளித்த சென்னை உயர்நீதிமன்றம், இட ஒதுக்கீடு தொடர்ந்து வழங்க வேண்டுமா? என்பது குறித்து 5 ஆண்டுகளுக்கு பிறகு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.