states

கேரளா முழுமையான மின் ஆளுமை மாநிலம் இன்று அறிவிக்கிறார் முதல்வர்

திருவனந்தபுரம், மே 24- கேரளா இப்போது முழு மின் ஆளுமை மாநிலமாக மாறி உள்ளது. கட்டணங்கள் செலுத்தல் உட்பட எண்ணூறுக்கும் மேற் பட்ட அரசு சேவைகள் இ-சேவை ஒற்றைச் சாளர முறைக்கு மாற்றப்படும். மாநில தக வல் தொழில் நுட்ப இயக்கம் இதை சாத்தி யமாக்கி உள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள நிஷாகந்தி கலை அரங்கத்தில் வியாழனன்று (மே 25)  ‘முழுமையான மின் ஆளுமை கேரளா’ அறி விப்பை முதல்வர் பினராயி விஜயன் வெளி யிடுகிறார். டிஜிட்டல் உட்கட்டமைப்பின் பயன்பாட்டில் மின் ஆளுமை இடை வெளியை குறைக்க இது உதவும்.  தொழில்  நுட்பத்தின் உதவியுடன், வெளிப்படை யான, திறமையான நிர்வாகம் உறுதி செய் யப்படும். அனைத்து அரசு சேவைகளும் அதி நவீன தொழில்நுட்ப தளங்களைப் பயன் படுத்தி ஆன்லைனில் வழங்கப்படும். கோப்பு பரிமாற்றத்திற்கான மின்-அலு வலக கோப்புப் பரிமாற்றம் உள்ளிட்ட டிஜிட் டல் தளங்கள் கிராம அலுவலக நிலை வரை  செயல்படுத்தப்படும். சுகாதாரம், கல்வி, வரு வாய், கட்டட பதிவேடுகள், பொது விநியோக  முறை, சமூக பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு போன்  றவை ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கப் பட்டுள்ளன. மின் ஆளுமை மாவட்டம் மற்றும் நீதிமன்ற வழக்கு மேலாண்மை அமைப்பு (இ - கோர்ட்), கே- ஸ்விஃப்ட், இ -  ஹெல்த்- இ - பிடிஎஸ், டிஜிட்டல் சர்வே மிஷன், இ - ஆர்எஸ்எஸ், சைபர் டோம் மற்றும் கைட் மேலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. டிஜிட்டல் உள்கட்டமைப்பை ஏற்றுக் கொள்வதில் உள்ள இடைவெளியை கே-ஃபோனால் குறைக்க முடியும். நாட்டி லேயே இணைய சேவையை குடிமக்களின் உரிமையாக மாற்றிய முதல் மாநிலம்  கேரளா. முந்தைய ஆண்டுகளில் ஒன்றிய அரசு நடத்திய தேசிய இ-சேவை விநியோக மதிப்பீட்டு ஆய்வுகளில் கேரளா முன்னணி யில் உள்ளது குறிப்பிடத்தக்கது.