states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் நினோய் அகினோ விமான நிலையத்தில் திடீரென மின்சேவை துண்டிக்கப்பட்டதால், 300 விமானங்களின் சேவைகள் ரத்து மற்றும் தாமாதம் என பல்வேறு சிக்கலை சந்தித்தது. 
  2. போலி லெட்டர்பேட் வைத்துக்கொண்டு போலி அரசியல் செய்து கொண்டிருக்கிறார் ஓ.பி. எஸ். ஒருங்கிணைப்பா ளர் என்ற பதவியே அதிமுகவில் இல்லை.  இல்லாத பதவிக்காக தேர்தல் ஆணையத் திற்கு கடிதம் எழுதியுள் ளார் ஓ.பி.எஸ் என அதி முக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.
  3. புத்தாண்டு கொண்டாட் டத்திற்கு பிறகு ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் யாத்திரை  தில்லி செங்கோட்டைக்கு அருகிலுள்ள ஹனு மான் மந்திர் பகுதியில் மீண்டும் தொடங்கு கிறது. யாத்திரையால் போக்குவரத்து நெரிச லில் சிக்காமலிருக்க ஐஎஸ்பிடி, ரயில்நிலையங் கள், விமானநிலையங் களுக்குச் செல்லும்மக்கள் போதுமான நேரத் துடன் முன்கூட்டியே பய ணத்தைத் திட்டமிடு மாறு தில்லி காவல் துறை கூறியுள்ளது.
  4. பிட்காயின் வர்த்தகத்தில் ‘கொடி கட்டி பறக்கும்’ முக்கிய வல்லுனரான லூக் டாஷ்ஜர் ஹேக்கிங் தாக்குதலில் தனது முழு  பிட்காயின் ஹோல்டிங்கு களையும் இழந்துவிட்ட தாகக் கூறி, 3.5 மில்லி யன் டாலர் மதிப்புள்ள 200-க்கும் மேற்பட்ட திரு டப்பட்ட பிட்காயின்கள் அனுப்பப்பட்ட பணப் பையின் இணைப்பையும் டுவிட்டர் மூலம் வெளி யிட்டுள்ளார்.
  5. விருதுநகர் மாவட்டம் சிவ காசி அருகே உள்ள தாயில் பட்டி கிராமத்தில் குப்பை கிடங்கில் கொட்டப் பட்டிருந்த பட்டாசு கழிவு களில் திடீரென தீப்ப ற்றியதில் 2 மாணவர்கள் காயமடைந்தனர்.
  6. உலகம் முழுவதும் செய்திகளைச் சேகரிக்கும் ஊடகவிய லாளர்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில்  கிட்டத்தட்ட 1,700 செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சராசரியாக ஆண்டுக்கு 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று எல்லை கடந்த செய்தியாளர்கள் அமைப்பு திரட்டியுள்ள புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. 2003-ஆம் ஆண்டில் இருந்து 2022 வரையிலான காலகட்டம் மிகவும் மோசமானதாக இருந்தது என்று தெரிய வந்துள்ளது.
  7. சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ  ஒத்துழைப்பு பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு இது பெரிய அளவில் பங்களிப்பு செலுத்தும் என்பதே இதற்குக் காரணமாகும் என்று ரஷ்ய  ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலான உலக அமைப்பு உருவாக்குவதே நமது நோக்கம் என்றும், அதற்கு இந்த ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
  8. பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப்பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 35 பேர் படுகாயமடைந்துள்ளனர். 2022-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 160 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். நேப்ளஸ் நடந்த  இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்து  வரும் ரெட் கிரெசன்ட் அமைப்பு இந்தத் தகவலை வெளியிட்டிருக் கிறது.