states

மாணவர்களின் அரசியல் பரப்புரைக்கு விதிக்கப்பட்ட தடை திரும்பப் பெறப்பட்டது

சேலம், ஜூன் 5-  சேலம் பெரியார் பல் கலைக்கழகம் மற்றும் இணைவு பெற்ற கல்லூரி களில், மாணவர்களின் அரசி யல் பரப்புரைகளுக்கு விதிக் கப்பட்ட தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.  சேலம் கருப்பூரில் செயல் பட்டு வரும் பெரியார் பல் கலைக்கழகத்தின் கீழ், 4 மாவட்டங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில், ஒரு லட்சத்திற்கும் அதிக மான மாணவர்கள் இளங் கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படித்து வருகின்றனர்.  பெரியார் பல்கலைக் கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிக ளில் படித்து வரும் மாண வர்கள், பல்வேறு அமைப்பு களில் ஈடுபாட்டுடன் செயல் பட்டு வருகின்றனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அவ்வப்போது ஆர்ப்பாட்டம், போராட்டங்க ளில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் அடுத்த கொண்ட லாம்பட்டி ரவுண்டானா பகு தியில் செயல்பட்டு வரும் இரு பாலர் கல்லூரியை சமீபத் தில் மகளிர் கல்லூரியாக மாற்றி அரசாணை வெளியா னது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து, பெரி யார் பல்கலைக்கழக துறை கள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள், அரசியல் சார்ந்த பரப்புரைகளை பல் கலைக்கழகம் மற்றும் கல்லூரி வளாகங்களில் மேற் கொள்வதற்கு தடை விதித்து, துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டார்.  இதனிடையே, பெரியார் பல்கலைக்கழகத்தின் இந்த உத்தரவிற்கு மாணவர் அமைப்புகள், சமூக ஆர்வ லர்கள் மற்றும் கல்வியா ளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இத னை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பல் வேறு தரப்பினரும் வலி யுறுத்தினர். இதனைய டுத்து, பெரியார் பல்கலைக் கழகத்தின் தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல் கலைக்கழக பதிவாளர் கோபி (பொ) வெளி யிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘‘பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள், அரசி யல் சார்ந்த பரப்புரைகளை பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி வளாகங்களில் மேற்கொள்வதற்கு விதிக்கப் பட்ட தடை விலக்கிக்கொள் ளப்படுகிறது’’ என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.