நீதித்துறை மூலமாக பாபர் மசூதி அபகரிக்கப்பட்டது. அந்த இடத்தில், ராமர் கோவில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, கட்டி முடிக்கப்படாத ராமர் கோவில் கருவறையில் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் கண்டுபிடிப்பு
ராம பக்தி பாரம்பரியத்தில் குழந்தை ராமர் என்பதற் கான எவ்வித ஆதாரமும் கிடையாது. இதைப் பற்றி எல்லாம் உச்சநீதி மன்றம் கவலைப்படவில்லை. குழந்தை ராமரை இந்து பாரம்பரியத்தில் வழிபடுவதில்லை. குழந்தை ராமரைப் பற்றிய ஒரு பாடலைக் கூட காட்ட முடியாது. துளசிதாசர் கிருஷ்ணனை வேண்டு மானால், பாலகிருஷ்ணன், லட்டு கோபால் என்று வர்ணித்திருக்கிறார். இப்போது கூட அயோத்தியைச் சுற்றிலும் உள்ள எண்ணற்ற ராமர் கோவில்களில் குழந்தை ராமர் வழி பாடு என்பது கிடையாது . 1990களில் துளசி தாசரின்” துமாக் சலாத் ராமச்சந்திரா” எனும் பாடல் அனூப் ஜலோலா என்பவ ரால் பிரபலப்படுத்தப்பட்டது. இதுவும் கூட குழந்தை ராமர் இல்லை. கல்யாண ராமரைப் பற்றித்தான். குழந்தை ராமர் என்பது முற்றி லும் ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிசத் கண்டுபிடிப்பாகும். இந்த கட்டுக் கதையை கடந்த 40 -45 ஆண்டு களுக்குள்ளாக பாரம்பரியமான/பழங்காலக் கதை போல பிரச்சாரம் செய்து மக்களை நம்பச் செய்துவிட்டது.
ஆராயாமல் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்
வெறும் 40 -45 ஆண்டுகளுக்குள் மட்டுமே பிரபலப்படுத்தப்பட்ட குழந்தை ராமர் என்பதன் உண்மைத் தன்மை பற்றி உச்சநீதிமன்றமும் ஆய்வு செய்து அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. ஏன் குழந்தை ராமருக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்க வேண்டும் என்று சிந்திக்கவும் இல்லை. இந்துமதப் படைப்புகளில் குறிப்பிட ப்படாத குழந்தை ராமர் சிலை பாபர் மசூதியில் எப்படி வந்தது? பல்வேறு ராமாயணங்கள், ராமர் தொடர்பான ஏராளமான நாட்டுப்புறக் கதைகள் எவற்றையும் படிக்காமல் குழந்தை ராமர் சிலையை அங்கீகரித்துவிட்டது ஐந்து பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு. ராமர் சிலை என்ற போர்வையில் பாபர் மசூதியைக் கைப்பற்றவும், கற்பனையான அநீதிகள் எனும்பேரில் முஸ்லிம் மக்களின் மீது போர் தொடுக்க வுமே குழந்தை ராமர் கண்டுபிடிக்கப் பட்டது. துளசிதாசர் ராமரை தீனதயாளனே, கிருபாகரனே(பலவீனமானவர்களின் நண்பன், ஏழைகளிடம் கருணை கொண்டவன்) என்று பாடுகிறார். ஆனால் ஆர்எஸ்எஸ், பாஜக முன்னி றுத்தும் ராமர் எப்படிப்பட்டவர்? உண்மை யான ராமரை ஆர்எஸ்எஸ் பாஜகவினர் மறைத்து விட்டனர். குழந்தை ராமரை அவனது பிறந்த இடத்திற்கு கைபிடித்து அழைத்துச் செல்வதாக, தங்களைக் காட்டிக் கொள்ளும் துணிச்சல் ஆர் எஸ்எஸ், பாஜகவினருக்கு ஏற்பட்டுள்ளது. தங்களை முழுவதுமாக ஆர்எஸ் எஸ் கூட்டத்தாரிடம் ஒப்புக்கொடுத்து விட்டோமா; மெய்யான ஆன்மீக ராமரை மறந்து விட்டோமா என்பதை இந்துக்கள் தான் தங்கள் மனசாட்சியைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
- அபூர்வானந்த்
நன்றி: பிரண்ட்லைன் பிப். 9,2024
- தமிழில் ம.கதிரேசன்