states

முப்படைகளுக்குள் சங்பரிவாரங்களை புகுத்தும் திட்டமா அக்னி பாதை? கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை,ஜூன் 18- “சங்பரிவாரங்களை முப்படைக ளுக்குள் புகுத்தும் நடவடிக்கைதான் ‘அக்னி பாதை’ திட்டமா?” என்று காங்கி ரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ். அழகிரி சந்தேகம் எழுப்பி யுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முப்படைகளுக்கும் 46 ஆயிரம்  படை வீரர்களைத் தேர்வு செய்யும் அக்னி பாதை என்ற திட்டத்தை மோடி  தலைமையிலான பாஜக அரசு அறிவித்துள்ளது. வேலையின்மை, உறுதியற்ற தன்மை, கேள்விக்குறியான எதிர்காலம் என்ற கவலையில் இருக்கும் இளைஞர்களுக்கு இந்த  அறிவிப்பு பேரதிர்ச்சியாக அமைந் துள்ளது. முப்படைகளின் நீண்ட கால மரபுகள்  மற்றும் நெறிமுறைகளைத் தகர்க்கும்  அக்னி பாதை திட்டம் ஆபத்தானது. இந்தத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப் படும் வீரர்களுக்கு எதிர்காலம் குறித்த உத்தரவாதம் இல்லை. இந்த அச்சத்தின் காரணமாகத் தான் இளைஞர்கள் வெகுண்டெழுந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முப்  படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளும் அக்னி பாதை திட்டத்தை முற்றிலும் எதிர்த்துள்ளனர். அக்னி பாதை திட்டம் என்பது சங்பரிவாரங்களை முப்படைகளுக்குள் புகுத்தும் நடவடிக்கையோ என்ற சந்தே கம் இயல்பாக எழுகிறது. அக்னி பாதை திட்டத்தில் 17 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களை மட்டுமே சேர்ப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. இதனால், பாதுகாப்புப் படையில் பணியாற்றும் வாய்ப்பை நமது இளைஞர்களில் பெரும்பாலோர் இழந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தத் திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் ஆபத்தானது என்று இளைஞர்கள் அஞ்சுவதால் தான்  தன்னெழுச்சியோடு இன்றைக்குத் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டி ருக்கிறார்கள். அக்னி பாதை திட்டத்தினால் நாடே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி அவர்களது எதிர்கா லத்தை உறுதி செய்யாமல், தொடர்ந்து  அவர்களுக்கு எதிரான தாக்குதலில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருவதையே  அக்னிபாத் திட்டம் வெளிப்படுத்து கிறது. இளைஞர்கள் தேன்கூடு போன்ற வர்கள். அவர்கள் எதிர்காலத்தின் மீது நீங்கள் தொடர்ந்து கல் எறிந்தால்,  அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்  என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.