அண்மையில் எதிர்க்கட்சிகள் ஆளும் ஐந்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களின் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. 15ஆவது நிதி கமிஷனின் பரிந்துரையான ஒட்டு மொத்த வரித்தொகையின் 41 சதவீத பங்கீட்டு வரம்பை 50 சதவீதத்திற்கு உயர்த்த வேண்டும் என்னும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும் ஒன்றிய அரசின் திட்டங்களுக்காக அது வசூல் செய்யக்கூடிய செஸ்கள் மற்றும் கூடுதல் கட்டணங்களுக்கு வரம்பும் விதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
முதல்வர்கள் கூட்டம் நடத்துக!
ஜிஎஸ்டி சட்டம் அறிமுகமானது முதல், வரி வசூலிக்க மாநிலங்களின் தன்னாட்சி உரிமை மீது தாக்குதல் அதிகரித்து வருவதை பற்றி விவாதிக்கவும் எதிர்க்கட்சிகள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற விவாதத்தை கர்நாடக முதல்வர் சீத்தராமையா எழுப்பிஉள்ளார். சிறந்த பொருளாதார குறியீடுகளைக் கொண்ட பெங்களூரு புறநகர் ரயில் திட்டம், கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகம், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திற்கு 2024-25 பட்ஜெட்டில் மத்திய நிதி ஒதுக்கீடு போதிய அளவிற்கு செய்யாததன் பின்னணியில் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த டிசம்பரில் தமிழகத்தின் டெல்டா பகுதிக ளில் ஏற்பட்ட வெள்ளம்,மேற்கு குஜராத்தில் சமீபத்தில் பெய்த பெருமழை, கேரளாவில் வயநாடு நிலச்சரிவு போன்ற இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களை தாக்கும் இயற்கை பேரழிவுகளின் பின்னணியிலும் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. 16ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைகள் அக்டோபர் 2025க்குள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் ஏழ்மையான பகுதிகளின் வளர்ச்சிக்கான ஒரு நடவடிக்கையாக வரிப் பகிர்வை நிர்ணயிப்பதில் மாநிலங்களுக்கு இடையேயான மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்ள வித்தியாசம் 15ஆவது நிதிக் குழுவால் 45 சதவீதம் என்ற அதிகபட்ச வரம்பை வழங்கி உள்ளது. குஜராத், கர்நாடகா,மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அதிக வரி வருவாய் வழங்கினாலும் குறைவான பகிர்வை பெறுகின்றன.தொழில்துறை மற்றும் பொருளாதார வலிமைகளில் முன்னேற அந்தந்த மாநிலங்களுக்கு பல்வேறு பிராந்தியங்களில் குறிப்பிட்ட வளர்ச்சி, காலநிலை மற்றும் தொழில்துறை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் மூலதனம் மற்றும் சமூக செலவுகளுக்கு நிதி தேவைப்படுகிறது.
வரிப் பகிர்வு கட்டமைப்பில் திருத்தம் தேவை
உயர் செயல்திறன் கொண்ட மாநிலங்களின் அரசாங்கங்கள் ஜிஎஸ்டி கட்டமைப்பின் மூலம் வரி வசூல் மீதான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் அதே வேளையில் தங்கள் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான கட்டத்தில் தங்கள் கைகள் கட்டப்பட்டு உள்ளதையும் உணர்கின்றன. மேலும் ஜிஎஸ்டியோ, நிதி ஆயோக் அமைப்போ தற்செயல் செலவுகளை நிவர்த்தி செய்யவில்லை. தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிக்கும் தற்போதைய சூழலில் முன்பு எப்போதையும் விட இந்த அம்சம் முக்கியத்துவம் பெறுகிறது. பரந்த வேறுபட்ட சமூக மற்றும் பொருளாதாரக் குறியீடுகள், இயற்கை வளங்கள் மற்றும் பாதிப்புகளின் சமமான, வேறுபட்ட பரவல் ஆகியவை நிறைந்த இந்தியா போன்ற ஒரு பெரிய மற்றும் சிக்கலான நாட்டில் மாநிலங்களின் அதிக சுயாட்சிக்கு வழி வகுக்கும் வகையில் வரிப் பகிர்வு கட்டமைப்பை திருத்துவதற்கு அவசரமாக தலையீடு செய்ய வேண்டிய நேரம் இது. மேலும் எல்லா மாநிலங்களும் அதன் உள்ளார்ந்த வலிமையோடு பங்கேற்கும் ஒரு உண்மையான கூட்டாட்சிக்கும் இதுவே வழிவகுக்கும்.
நன்றி : தி இந்து தலையங்கம், (19/9/24)