states

துபாய் காலநிலை மாநாடு கவனம் ஈர்த்த “மணிப்பூர்” சிறுமி

ஐக்கிய நாடுகளின் 28-ஆவது பருவ நிலை உச்சி மாநாடு (காப்-28) ஐக்கிய  அரபு அமீரகத்தின் துபாயில் கடந்த நவம்பர் 30 அன்று துவங்கி டிசம்பர் 12 வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகின் 190 நாடுகளில் இருந்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண் பது, உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரி சக்தி முயற்சி, கரியமில வாயு வெளியீட்டை  குறைப்பது உள்ளிட்ட பல்வேறு சூழலியல் சார்ந்த அம்சங்கள் குறித்து விவாதித்தனர். இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற் றார். இந்த மாநாட்டின் கடைசி நாளான செவ்  வாயன்று (டிசம்பர் 12) டிமோர் லெஸ்டி நாட்டின் (இந்தோனேசியாவுக்கும் ஆஸ்தி ரேலியாவுக்கும் இடைப்பட்ட தீவு) சிறப்பு  தூதரான 12 வயது சிறுமி லிசிபிரியா கங்கு ஜம் தான் வைத்து இருந்த பதாகையோடு திடீரென மேடை ஏறி, “புதைப்படிவ எரிபொரு ளுக்கு தடைவிதிப்பீர். நமது புவியையும், நமது எதிர்காலத்தையும் பாதுகாப்பீர்” கடும்  சத்தத்துடன் முழங்கினார். பதாகையிலும் அதே விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்  றிருந்த நிலையில், இது விதிமீறல் எனக் கூறி  பாதுகாவலர்கள் மேடையிலிருந்து கீழே இறங்கினர். பாதுகாவலர்கள் கூறியவுடன் சமத்து பிள்ளையாக மீண்டும் அமைதியாக இருக்கையில் உட்கார்ந்தார் லிசிபிரியா கங்குஜம். பாராட்டு மழையில் நனையும் மணிப்பூர் சிறுமி மாநாட்டில் சில விநாடிகளே மேடையேறி னாலும் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள லிசிபிரியா கங்குஜம், கலவரத்தால் பாதிக் கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரைச் சேர்ந்தவர் ஆவார்.  இந்நிலையில், பருவநிலை உச்சி மாநாட்டின் பொது தூதுவர் மஸ்ஜித் அல்  சுவைதி, லிசிபிரியா கங்குஜமின் செயலை  பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகை யில்”பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த சிறுமி பேசியதும் சூழலியலில் அவ ருக்கு உள்ள ஈடுபாட்டை கண்டு வியந்து பாராட்டுகிறேன்” என்றார். இதேபோல் அரங்  கில் கூடியிருந்தவர்களும் சிறுமியின் விழிப்பு ணர்வு முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ள னர்.