சென்னை,மே 2- பள்ளி பாடப்புத்தகங்களில் மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதில் ஒன்றிய அரசு என வரும் கல்வி ஆண்டில் அச்சிடப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் தலைவரான திண்டுக்கல் லியோனி தெரிவித்தார். இதுகுறித்து லியோனி செய்தியாளர்களி டம் கூறுகையில், மாணவர்கள் கல்வியை சுமையாக நினைக்காமல், மகிழ்ச்சியாக படிக்கும் வகையில் நூல்களை மாற்ற வேண்டும். சமச்சீர் கல்வியை முன்னு தாரணமாக வைத்து பாட நூல்களை தயாரிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப் பட்டுள்ளது. பாடத்திட்டத்திலும் மத்திய அரசு என்ற வார்த்தை மாற்றப்பட்டு இனி வரும் காலங்களில் ஒன்றிய அரசு என அச்சிடப்படும் என்றார். ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியில் ஏராளமான புத்தகங்கள் அச்சிடப்பட்ட நிலை யில், ஒரு வார்த்தையை மாற்றுவதற்காக மீண்டும் புத்தகங்கள் அச்சிடப்பட்டால் பல கோடி ரூபாய் வீணாகும் என தெரிவிக்கப் பட்டது. தற்போதைய நிதிச்சூழலில் அது மேலும் சிக்கலை எழுப்பும் என கல்வித்துறை ஆர்வலர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த லியோனி, பள்ளிப் பாடப்புத்தகங் களில் மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதில் ஒன்றிய அரசு என இந்த கல்வியாண்டில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என்று விளக்கம் அளித்துள்ளார்.