தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய விரும்பினார். ஆனால் நான் அதை நிராக ரித்தேன். தமிழ்நாட்டில் உள்ள கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது. கோவில்களைக் கட்டுப்பாட்டில் வைத்து அதன் சொத்துகள் வரு மானத்தை முறைகேடாக தமிழ்நாடு அரசு பயன்படுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக வெளியேறிய நிலையில், கோவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்எல்ஏ-க்கள் பொள்ளாச்சி ஜெய ராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகி யோர் சந்தித்துப் பேசினர். சந்திப்பின்போது பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் உடனிருந்தார்.
திருவில்லிபுத்தூர் அருகே விவசாயியை கிராம சபை கூட்டத்தில் கேள்விகேட்ட விவசாயியை ஊராட்சி செயலாளர் தங்கபாண்டி எட்டி உதைத் தார். இந்த சம்பவத்தில் ஊராட்சி செயலாளரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி டவுன் பகுதியில் பேன்சி ஸ்டோ ரில் வேலைபார்த்து வந்த சந்தியா என்ற 18 வயது இளம்பெண், காதல் விவகாரம் தொடர்பாக திங்களன்று வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய இழப்பீடு வழங்கக் கோரி கரிசல்குளம் பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று, வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ரயில், தண்டவாளத்தில் உள்ள தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
பழனியை தொடர்ந்து திருச்சி சமயபுரம் மாரி யம்மன் கோயிலில் செல்போன்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் கள் பாதுகாப்பாக வைக்க புதிய பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு வருகிறது.
விடுமுறை முடிந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒரே நேரத்தில் பயணிகள் சென்னை திரும்புவதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் மேம்பாலம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து கடும் நெரிசல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.