states

தீக்கதிர் விரைவு செய்திகள்

குட்கா, பான் மசாலா தடை ரத்து: தமிழ்நாடு அரசு மேல் முறையீடு

சென்னை, பிப். 9- தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு உணவுப் பாது காப்பு துறை ஆணையர் கடந்த 2018ஆம் ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி யார் புகையிலை நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்நிலையில் ஆணையரின் உத்தரவை மீறியதாக சில நிறுவனங் களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்ற  நடவடிக்கைகளும் தொடரப்பட்டன. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வேறு சில வழக்குகளும் தொடரப் பட்டிருந்தது. இந்த வழக்குகளை கடந்த மாதம் விசாரித்த நீதிமன்றம், உணவு பாதுகாப்பு சட்டத்தில் குட்கா  வரவில்லை. அவசர நிலை கருதி இது போன்ற புகையிலை பொருட்களை அதிகபட்சமாக ஓராண்டு வரைதான் தற்காலிகமாக தடை செய்ய ஆணையருக்கு அதி காரம் உள்ளது. இதனால் புகையிலை பொருட்களுக்கு விதித்த தடை ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை, பிப். 9- மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகி றது. இங்கு முதல் யூனிட்டில் தலா 3 அலகுகளில் 210 வீதம் 630  மெகாவாட்டும், 2ஆவது யூனிட் 2 அலகுகளில் 600 வீதம் 1,200 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படு கிறது. இந்நிலையில், அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது ஏற்பட்டதையடுத்து, 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1ஆவது நிலையின் 3ஆவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட  கசிவு காரணமாக மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது.

‘எலாரா’ நிறுவனத்தை கண்காணிப்பில் கொண்டு வந்த இங்கிலாந்து!

புதுதில்லி, பிப். 9 - அதானி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனம் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள ‘எலாரா கேபிடல்’ (Elara Capital) நிறுவனத்தை இங்கிலாந்து அரசின் நிதி நடத்தை ஆணையம் (FCA) தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதானி குழுமம் ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவிற்கு பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டிருப்பதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தது. அதுதொடர்பான 106 பக்க ஆதாரங்களையும் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான இழப்பை சந்தித்துள்ளன. மேலும், உலக பணக்காரர்கள் பட்டியலில் 3-ஆவது இடத்திலிருந்த கவுதம் அதானி தற்போது 17-ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், அதானி நிறுவன பங்குப் பத்திரங்களின் மதிப்பும் சரிந்து விட்டது. இதனிடையே, பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்ட அதானி குழுமத்துடன், லண்டனை சேர்ந்த ‘எலாரா கேபிடல்’ நிறுவனம் தொடர்பு வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த பின்னணியில், ‘எலாரா கேபிடல்’ நிறுவன செயல்பாடுகளை இங்கிலாந்தின் நிதி நடத்தை ஆணையம் (Financial Conduct Authority - FCA) தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘எலாரா கேபிடல்’ நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் இங்கிலாந்துக்கு வெளியேதான் இருக்கின்றன. ஆனாலும் ‘எலாரா கேபிடல்’ நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள், பரிவர்த்தனைகள் பற்றி ஆணையம் கண்காணித்து வருகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ‘எலாரா கேபிடல்’ நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த ராஜ் பட் என்பவரால் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் லண்டனில் மட்டுமல்லாமல் மும்பை, அகமதாபாத் நகர்களிலும், நியூயார்க், மொரீசியஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இயங்கி வருகிறது. இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் சகோதரர் ஜோ ஜான்சன், இந்த நிறுவனத்தில் நிர்வாகக் குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். ஆனால், அதானி - எலாரா தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, பிப்ரவரி 1-ஆம் தேதி ‘எலாரா கேபிடல்’ நிர்வாகக் குழுவில் இருந்து ஜோ ஜான்சன் ராஜினாமா செய்து விட்டு ஒதுங்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.