சென்னை, நவ. 10 - தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக செல்லும் பயணிகளால், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களைத் தொடர்ந்து தற்போது விமான நிலையங்களிலும் கூட்டம் அலைமோதத் துவங்கியுள்ளது. இதனைப் பயன்படுத்தி, விமான நிறுவனங்கள், கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும் பயணிகளால், தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. அரசு சிறப்புப் பேருந்து அனைத்திலும், ஏற்கெனவே முன்பதிவு முடிந்து விட்டது. தனியார் ஆம்னி பேருந்து களை எடுத்துக் கொண்டால், கட்ட ணம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் வேறுவழியின்றி விமானப்பயணத்தை நாடும் நிலைக்குப் பலர் தள்ளப்பட்டுள்ளனர். விமானங்களில் பயணித்தால், பயண நேரம் குறைவு, சொந்த ஊரில் குடும்பத்தாருடன் கூடுதல் நேரம் இருந்து, பண்டிகையை கொண்டாட லாம் என்று பயணிகள் பலர் விமான பயணத்துக்கு மாறியுள்ளனர். இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, சேலம், மதுரை, கோவைக்கு செல்லும் விமானங்க ளில் அதிக அளவில் பயணிகள் பயணிக்கின்றனர். இதனால் நவம்பர் 10, 11 ஆகிய இரு நாட்களுக்கு அனைத்து விமானங்களிலும் பெரும்பாலான டிக்கெட் விற்பனை ஆகிவிட்டன. ஒரு சில உயர் வகுப்பு டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. அந்த டிக்கெட்கள் கட்டணங்கள் மிகவும் அதிகமாக உள்ளது. சென்னை - சேலம் வழக்கமான கட்டணம் ரூ. 2 ஆயிரத்து 390 என்றால், நவம்பர் 10, 11 ஆகிய நாட்களுக்கு ரூ. 11 ஆயிரத்து 504 கட்டணமாக கேட்ப தாக கூறப்படுகிறது. சென்னை - தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ. 4 ஆயிரத்து 273 என்றால், தற்போது ரூ. 13 ஆயிரத்து 287 கேட்கப்படுவதாக வும், சென்னை - கோவை வழக்கமான கட்டணம் ரூ. 3 ஆயிரத்து 315 என்றால், அது தற்போது ரூ. 13 ஆயிரத்து 709 எனவும், சென்னை - திருச்சிக்கான வழக்கமான கட்டணம் ரூ. 3 ஆயிரத்து 190 என்ற நிலையில், அது ரூ. 13 ஆயிரத்து 086 ஆகவும், சென்னை - மதுரை வழக்கமான கட்டணம் ரூ. 3 ஆயிரத்து 314 என்ற நிலையில், அது ரூ. 13 ஆயிரத்து 415 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.