சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,” சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் “சனாதன ஒழிப்பு மாநாடு” என்று நீங்கள் போட்டி ருக்கிறீர்கள். அதற்கு முதலில். வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம்” எனக் கூறினார். எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணியால் மிரண்டு போயி ருந்த பாஜக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை திரித்து சனா தன இந்து தர்மத்தை அழிக்க வேண்டும்; இந்துக்களை இனப்படு கொலை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியதாக பொய்யைப் பரப்பி ஆதாயம் தேட முயன்றது. உத்தரப்பிரதேச சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு ரூ.10 கோடி விலை அறிவித்தார். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்ய வைத்தனர். இதனிடையே, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபுவுக்கு எதிராகவும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரியும் உச்சநீதி மன்றத்தில் ஜெகநாத் என்பவர் மூலம் ரிட் மனு தாக்கல் செய்யப் பட்டது.
மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
அமைச்சர் உதயநிதிக்கு எதி ரான இந்த வழக்கை உச்சநீதி மன்றத்தின் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வெள்ளியன்று விசார ணைக்கு எடுத்தது. அப்போது “இந்த மனுவை நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும். உச்சநீதி மன்றத்தை எதற்காக நாடி னீர்கள்?’’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில், “இந்தியாவில் உச்சப் பட்ச நீதிமன்றம் உச்சநீதிமன்றம் தான் அதனால் தான் இங்கு அணுகினோம்’’ என தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து உச்சநீதி மன்ற நீதிபதிகள், “உயர்நீதி மன்றத்தை நீங்கள் நாடியிருக்க லாம். எந்த உயர்நீதிமன்றத்தை வேண்டுமானாலும் நீங்கள் நாடலாம்’’ எனக்கூறி வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர். ஆனால் மனுதாரர் தரப்பில் தொடர்ந்து உதயநிதி ஸ்டா லின் பேசிய கருத்துகள் குறிப்பிடப் பட்டன. குறிப்பாக சனாதன அழிப்பு, கொசு உள்பட பிற நோய்களுடன் ஒப்பிட்டு பேசி யதை மனுதாரர் சுட்டிக்காட்டி கொண்டிருந்தார். இதையடுத்து வழக்கை ஏற்ற நீதிபதிகள், சனாதன பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலி னும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது குறித்து தமிழ்நாடு அரசும் பதி லளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர்.