states

உச்சநீதிமன்றம் தீர்ப்பு: சிபிஎம் கருத்து

புதுதில்லி, ஜன.2- 2016இல் ஒன்றிய அரசாங்கத்தின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை உச்சநீதிமன்றத் தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய  அமர்வாயம் அப்படியே ஏற்றுக்கொண்டதாகக் கொள்ள முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலை மைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில், பெரும் பான்மை நீதிபதிகள் பணமதிப்பு நீக்க நட வடிக்கையை எடுப்பதற்கான சட்ட உரிமை ஒன்றிய அரசாங்கத்திற்கு உண்டு என்றும், எனவே அது 1934ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் 26(2)ஆவது பிரிவை மீறியதாகாது என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால், பெரும்  பான்மை நீதிபதிகளின் தீர்ப்புக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ள நீதிபதி, பணமதிப்பு நீக்கம் செய்யலாம் என அரசாங்கத்திற்கு, இந் திய ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கிச் சட்டம் கூறுகிறது என்று கூறியிருக்கிறார். இந்த வழக்கில் ஒன்றிய அரசாங்கம் மேற்கொண்ட முடிவு தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் கருத்தைக் கோரி யிருந்தது. எனவே, ஒன்றிய அரசாங்கம் முடிவு  எடுத்து அதை நிறைவேற்றுவதற்கு முன்பு நாடா ளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும்.

பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு, பணமதிப்பு நீக்கம் அதன் குறிக்கோள்களுடன் “போதுமான இணைப்பு”, பெற்றிருந்தது என் றும், ஆனால் “அந்தக் குறிக்கோள்கள் நிறை வேறினவா இல்லையா என்பது இங்கே ஆரா யப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்றும் கூறியிருக்கிறது. அரசாங்கத்திற்கு இத்தகைய முடிவு எடுப்பதற்கு சட்ட உரிமை உண்டு என்று கூறி யுள்ள பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பில்,  இம்முடிவின் தாக்கம் எப்படி இருந்தது என்று எதுவும் கூறப்படவில்லை. பணமதிப்பு நீக்கம்  கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரங்க ளைப் பறித்து இந்தியப் பொருளாதாரத் தையே ஒழித்துக்கட்டியது. சிறு, குறு தொழில்பிரிவு களை முடக்கி, கோடானுகோடி மக்களின் வாழ்  வாதாரங்களை ஒழித்துக்கட்டியது.  2016இல் இந்த முடிவு எடுக்கப்பட்டபின் ஒரு மாத காலத் திற்குள் 82 பேர் இதற்குப் பலியானார்கள் என்று  செய்திகள் தெரிவித்தன.

மேலும், பேரழிவு ஏற்படுத்தக்கூடிய பண மதிப்பு நீக்க கொள்கையை அமலாக்கிய போது,  இதன் மூலம் கறுப்புப்பணத்தைக் கண்டு பிடித்து  வெளிக்கொண்டு வந்துவிடுவோம் என்  றும், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கள்ளப் பணத்தை மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டு வந்துவிடுவோம் என்றும், கள்ள நோட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவோம் என்றும், பயங்கரவாதிகளுக்கு நிதிஅளிக்கப்படுவதற்கு முடிவு கட்டுவோம் என்றும், ஊழலை ஒழித்துக் கட்டுவோம் என்றும், பொருளாதாரத்தில் பணப் புழக்கத்தைக் குறைத்திடுவோம் என்றும் கூறிய  எதுவும் நடக்கவில்லை.  மாறாக, இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, பொது மக்களி டம் இருக்கக்கூடிய ரூபாய் நோட்டுகள், பண மதிப்பு நீக்க சமயத்தில் 17.7 லட்சம் கோடி ரூபாய்களாக இருந்தது, இப்போது 30.88 லட்சம் கோடி ரூபாய்களாக, அதாவது 71.84 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. உச்சநீதிமன்ற பெரும்பான்மை நீதிபதி களின் தீர்ப்பு, இத்தகு முடிவினை மேற்கொள்  வதற்கு ஒன்றிய அரசாங்கத்திற்கு உள்ள  உரிமையை மட்டுமே உயர்த்திப்பிடித்திருக்கி றதே தவிர, அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தோ அவை சரி என்றோ எந்தவிதத்திலும் கூறிடவில்லை. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்  கையில் கூறியுள்ளது.           (ந.நி.)