தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் வேண்டும் என, உச்சநீதிமன்றத்தை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நாடியுள்ளது. இதுதொடர்பாக எஸ்பிஐ தாக்கல் செய்துள்ள மனுவில், “ உச்சநீதிமன்றம், அதன் இடைக்கால உத்தர வில் 2019 ஏப்ரல் 19ஆம் தேதி முதல், தீர்ப்பு வெளியான தேதிவரை அதாவது 15.02.2024 வரை பொது மற்றும், நன்கொடையாளர்கள் வாங்கிய தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை வெளியிடுமாறு அறிவுறுத்தி யுள்ளது. அந்த காலகட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சி களுக்கு நன்கொடை வழங்குவதற்காக 22 ஆயிரத்து 217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டன. மீட்கப்பட்ட பத்திரங்கள் ஒவ்வொரு கட்டத்தின் முடிவிலும் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளால் மும்பை பிரதான கிளை யில் சீல் வைக்கப்பட்ட உறைகளில் டெபாசிட் செய்யப் பட்டன. இரண்டு வெவ்வேறு தகவல் பிரிவுகளில் இருப்ப தன் மூலம், மொத்தம் 44,434 தகவல் தொகுப்புகளை ஆராய்ந்து, தொகுத்து, ஒப்பிட்டு பார்க்க வேண்டும். எனவே உச்சநீதிமன்றம் 15.02.2024 தேதியிட்ட தீர்ப்பில் நிர்ணயித்த மூன்று வார காலக்கெடுவுக்குள் முழுப் பணியையும் முடிக்க இயலாது. இதனை கருத்தில் கொண்டு ஜுன் 30ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும்” என எஸ்பிஐ கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்பார்த்த ஒன்றுதான்
எஸ்பிஐ வங்கியின் இந்த கோரிக்கைக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் வெளியானால், பல லஞ்ச விவகாரங்கள் மற்றும் அவர்களுக்கு சாதகமாக நடைபெற்ற ஒப்பந்தங் கள், உதவிகள் வெளிப்படும். இதன் காரணமாக ஏற்கனவே எதிர்பார்த்ததைப் போலவே, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு எஸ்பிஐ வங்கி மூலம் கூடுதல் அவகாசம் கோரியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார். இவர் மட்டுமல்ல; சமூக ஊடகங்களில் செயல்படும் பலரும் எஸ்பிஐ வங்கியின் நடவடிக்கையை கடுமை யாக விமர்சித்துள்ளனர். ஆளும் கட்சியின் நிர்பந்தம் கார ணமாகவே எஸ்பிஐ காலஅவகாசம் கேட்கிறது. ஜூன் மாதம் வெளியிட்டால் அதற்குள் தேர்தலே முடிந்து விடும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இப்போது வெளியிட் டால் பாஜக மற்றும் மோடி, அமித்ஷா கம்பெனியின் மோச டிகள் - முறைகேடுகள் அம்பலமாகும். மோடியே சொல்வது போல் டிஜிட்டல் இந்தியாவில் இருக்கிறோம்; ஒரே ஒரு கிளிக்கில் அனைத்து தரவுகளையும் எடுத்து விட லாம். ஆனால் எஸ்பிஐ அதை செய்யுமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
- அ.விஜயகுமார்