மும்பை, மே 31- மும்பை பங்குச் சந்தை, கடந்த 3 வர்த்தக நாட்களாக தொடர் உயர்வில் இருந்து வந் தது. இந்நிலையில், நடப்பு வர்த்தக வாரத்தின் 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை யன்று மீண்டும் சரிவைச் சந் தித்துள்ளன. வர்த்தகம் துவங் கும் போதே 500 புள்ளிகள் சரிவில் துவங்கியதால், சில் லரை முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். வர்த் தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 359.33 புள்ளிகள் சரிந்து 55,566.41 புள்ளிகளை யும், தேசியப் பங்குச் சந்தைக் குறியீடான நிப்டி 76.85 புள்ளி கள் சரிந்து 16,584.55 புள்ளி களையும் அடைந்தது. ஆசிய பங்கு சந்தைகளில் நில விய மந்த நிலையே இந்திய பங்கு சந்தைகளின் சரிவுக்கு காரணம் என்று சந்தை வல் லுநர்கள் தெரிவித்தனர்.