states

வேதாரண்யத்தில் இலங்கை கடல் கொள்ளையர் மீனவர்கள் மீது தாக்குதல்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து திங்களன்று மதியம் 50-க்கும்  மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். திங்களன்று இரவு, 22 நாட்டிகல் மைல் தொலைவில் மீனவர்கள் மீன்  பிடித்துக் கொண்டிருந்தனர். அப் போது 5 பைபர் படகுகளில் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் 15-க்கும் மேற்பட்டோர் ஆறுகாட்டுத்  துறையைச் சேர்ந்த 4 விசைப்படகு கள் மற்றும் ஒரு பைபர் படகை வழி மறித்தனர். பின்பு, மீனவர்களின் படகில் ஏறிய  கடல் கொள்ளையர்கள் கத்தி, கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் மீன வர்களை கடுமையாக தாக்கி, பட கில் இருந்த மீன்பிடி வலைகள், திசை  காட்டும் கருவி, பேட்டரிகள், வாக்கி  டாக்கி மற்றும் மீன்பிடி உபகரணங் களை பறித்துக் கொண்டு விரட்டி யடித்துள்ளனர்.  இதில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக ஆறுகாட்டுத்துறை கரைக்கு நள்ளிரவில் வந்து சேர்ந்த னர். பின்னர் அங்கிருந்து ஆம்பு லன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு  மருத்துவமனைக்குச் சென்ற மீனவர் கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் பாஸ்கர், அருள்ராஜ், சுப்பிரமணியன், வெற்றிவேல் ஆகிய 4 மீனவர்களுக்கு தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதில் பாஸ்கர், அருள்ராஜ் ஆகி யோர் மேல் சிகிச்சைக்காக நாகை  அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வரு கின்றனர். செந்தில் அரசன், மருது,  வினோத் ஆகிய மூன்று மீனவர்  களுக்கு கை மற்றும் இடுப்பு பகுதி யில் காயம் ஏற்பட்டு, வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதேபோல், வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற  பைபர் படகையும் இலங்கை கடல்  கொள்ளையர்கள் தாக்கி, பொருட் களை பறித்துச் சென்றுள்ளனர். இதில் மீனவர் அருள்செல்வம் காய மடைந்து, நாகை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.