சென்னை,ஜூலை 10- தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பினால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி மாணவர்களுக்கான விளை யாட்டுப் போட்டிகள் நடப்பாண் டில் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் அட்டவணையையும் வெளியிடப்பட் டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்கள், உடற்கல்வி ஆய்வாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த 2019 - 2020ஆம் ஆண்டில் பள்ளி மாணவர்களுக் கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அதற்குப் பிறகு 2020 - 2021, 2021, 2022 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளில் கொரோனா காரணமாக விளையாட்டுப் போட்டிகளை நடத்த இயலவில்லை. நடப்பு கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இதன்படி 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 14, 17, 19 வயது பிரிவில் உள்ள மாணவர்களுக்கு புதிய உற்சாகத்தையும், உத்வேகத் தையும் ஏற்படுத்தும் வகையில் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளை யும் (குறுவட்டம் முதல் மாநில அளவில்), பல்வேறு நிலைகளில் குடியரசு தின விளையாட்டுப் போட்டி, பாரதியார் நாள் குழு, தடகள போட்டிகள் மற்றும் புதிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிகள் அனைத் தையும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கள், உடற்கல்வி ஆய்வாளர் கள் மூலம் உத்தேச செயல் திட்ட அட்டவணையின் அடிப்படை யில் நடத்த முடிவு செய்யப்பட் டுள்ளது. இவற்றை எந்தவித புகார்களுக்கும் இடமளிக்கா மலும், உரிய பாதுகாப்புடனும் நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14, 17, 19 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கு குறுவட்ட அளவிலான போட்டிகள் ஜூலை 27ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30ஆம் தேதி நிறைவு பெறும். இதையடுத்து அதே வயதுக்கு உள்பட்டோருக்கான வருவாய் மாவட்ட அளவி லான போட்டிகள் செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கி அக்டோ பர் 31ஆம் தேதி முடிவடைய வுள்ளது. இதையடுத்து அந்த மாணவர்களுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டி கள் நவம்பர் 10ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும்? என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 19 வயதுக்கு உள்பட்ட மாநில அளவிலான குழுப் போட்டிகள் (பாரதியார் நாள்) நவம்பர் 22ஆம் தேதி தொடங்கி நவம்பர் 26 ஆம் தேதி முடிவடை யும். மேலும் 17 வயதுக்கு உள் பட்ட மாநில அளவிலான குடியரசு தினபோட்டிகள் நவம்பர் 30 முதல் டிசம்பர் 4ஆம் தேதிவரை நடைபெறும். இந்தப் போட்டிகளைத் தொடர்ந்து மாநில அளவிலான புதிய விளையாட்டுப் போட்டி கள் அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடத்தப்படும். தொடர்ந்து பிப்ரவரி 19 ஆம் தேதி வரை பல்வேறு நிலைகளில் போட்டிகள் நடைபெறும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு டுள்ளது.