சோவியத் இசை யமைப்பாளரான மாட்வி பிளாண்டர் 1903 பிப்ரவரி 10 அன்று ரஷ்யாவின் போச்செப்பில் (தற்போது உக்ரைன்) பிறந்தார். இவர், வயலின் மற்றும் பியானோ இசைக் கருவிகள் குறித்த கற்றல் பயணத்தை, குர்ஸ்க் இசைப் பள்ளியிலிருந்து தொடங்கினார். முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் மிக முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவரான பிளாண்டரின் பாடல்கள், வானொலி மற்றும் திரை இசைகள் மிகவும் பிரபலமானவை. தொடக்க காலத்தில், லெனின்கிராட் நையாண்டி நாடக அரங்கிற்காக இவர் இயற்றிய இசை பலரையும் ஈர்த்தது. பின்னர் நகைச்சுவைத் தன்மையை வளர்த்துக் கொண்ட இவர், பாடல்களை நகைச்சுவையாக எழுதத் துவங்கினார். மாட்வியின் அனைத்துப் பாடல்களும் வெளிப்படையாக, நகைச்சுவை உணர்வுமிக்கதாக, எளிதில் நினைவில் கொள்ளத்தக்கவையாக இருந்தன. “கத்யூஷா” என்ற இவரது பாடல், 2 ஆம் உலகப் போரின் போது பெரும் புகழ்பெற்றது. இவர், தனது இசையில் பெரும்பாலும் நாட்டுப்புற மெல்லிசையை பயன்படுத்தி இருக்கிறார். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றிய மாட்வி பிளாண்டர், 1990 செப்டம்பர் 27 அன்று காலமானார்.