நாமக்கல், மே 1- வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர கங்களை முற்றுகையிடும் போராட்டம் நடை பெற உள்ளதாக கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: கடந்த 3 ஆண்டுகளில் பெட்ரோல். டீசல் மீதான கூடுதல் வரியை விதித்து ரூ.8 லட்சம் கோடி வருவாயை ஒன்றிய அரசு ஈட்டியுள் ளது. இந்த கூடுதல் வரியை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும். மாநில பல்கலைக் கழக துணைவேந்தர்களை மாநில அரசுகளே நியமனம் செய்யும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். நீட் விவகாரத்தில் ஆளுநர், காலம் தாழ்த்தாமல் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலை மற்றும் நூற்பாலை களில் சிறுவர்கள் வேலை செய்வதைத் தடுக்க வேண்டும். கொத்தடிமைகள் பணியமர்த்து வதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், தமிழகத்தில் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மே மாதம் 6 ஆம் தேதியன்று தமிழ கம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு மனு அளிக்கும் போராட்டம் நடைபெற உள்ளது என்றார். இப்பேட்டியின் போது கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ந.வேலுசாமி, ஏ.டி.கண் ணன். ஆகியோர் உடனிருந்தனர்.