மயிலாடுதுறை, டிச.8- சட்டவிரோதமாக செயல்படும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி டிசம்பர் 28 அன்று ஆளுநர் மாளிகையை முற்று கையிடப்போவதாக இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாநிலக் குழு அறிவித்துள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் மாநிலக்குழு கூட்டம் மயி லாடுதுறையில் டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது . மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாநிலப் பொருளாளர் பாரதி மற்றும் மாநில நிர்வாகிகள், மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. பாஜக ஒன்றிய ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக ஆட்சி நடக்காத மாநி லங்களில் ஆளுநர்களின் வழியாக மறைமுக ஆட்சி நடத்திட முயற்சி செய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச் சேரி, கேரளா, நாகாலாந்து, மகா ராஷ்டிரா என பல்வேறு மாநிலங்க ளில் இது தொடர்கிறது. சட்டவிரோத மான இந்த நடவடிக்கைக்கு எதிராக பெரும் எதிர்ப்பு இருந்து வரும் நிலை யில் வலுக்கட்டாயமாக ஆளுநர்கள் தங்கள் வஞ்சக நோக்கத்துடன் செயல் பாட்டை தொடர்ந்து வருகின்றனர். தமிழக ஆளுநர் ரவி தமிழகம் வந்த நாள் முதல் சர்ச்சைக்குரியவ ராகவே இருந்து வந்துள்ளார். அவர் வெளியிடுகிற கருத்துக்கள், கூட்டங் களில் பேசுகிற பேச்சுகள் முழுவது மாக நச்சுக் கருத்துகள் நிறைந்ததாக இருந்து வருகிறது..
நீட் தேர்வை திரும்ப பெறக் கோரும் மசோதா, ஆன்லைன் சூதாட் டத்தை தடை விதிக்கும் மசோதா உள் பட தமிழக அரசு நிறைவேற்றுகிற பல்வேறு மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள் ளார். இது அரசியல் அமைப்பு சட்ட விரோதமானது ஆகும். ஆளுநர்கள் அரசியல் பேச சட்டம் அனுமதிக்க வில்லை. ஒரு கட்சி சார்புடன் செயல் பட சட்டம் அனுமதிக்கவில்லை. மாநில அரசின் செயல்பாடுகளை விமர்சிக்க ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப் படவில்லை. ஆனால் தொடர்ந்து திராவிட எதிர்ப்பு. சனாதன தர்ம ஆதரவு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஆளும் பாஜகவை நேரடியாக ஆதரிப்பவராகவும் இருந்து வரு கிறார். இது முழுமையாக அமைப்பு சட்டவிரோதமானதாகும். தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியு றுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கையெழுத்திட்ட மனு குடி யரசு தலைவருக்கு கொடுக்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இருந்து வந்துள்ள ஆளுநர்களின் மாண்புக்கு எதிரான செயல்பாடு களை கொண்டுள்ள தமிழக ஆளுநர் ரவியை குடியரசு தலைவர் திரும் பப்பெற வேண்டும் என்று வலி யுறுத்தி டிசம்பர் 28 புதன்கிழமை யன்று சென்னை கிண்டி ராஜ்பவ னில் உள்ள தமிழக ஆளுநர் அலு வலகத்தை முற்றுகையிட்டு வாலி பர் சங்கம் சார்பாக போராட்டம் நடை பெற உள்ளது.