states

ஆணவம் கூடாது என்கிறார் புத்தர்; இதை மோடிக்கு எடுத்துச் சொல்லுங்கள்!

புனே, ஜூன் 2 - ஆணவத்தைக் கைவிட்டால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற புத்தரின் அறிவுறுத்தலை பிரதமர் நரேந்திர மோடியிடம் யாராவது சொல்லுமாறு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் பங்கேற்று உரையாற்றியுள்ளார். அப்போது மேலும் அவர் பேசியிருப்பதாவது: “கவுதம புத்தரின் ஒரே ஒரு அறிவுரையை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றால், அது அகங்காரத்தை கைவிட வேண்டும் என்பதுதான். அகங்காரத்தை கைவிடும்  மனிதர்கள் வாழ்க்கையில் வெற்றி யாளர்களாக திகழ்ந்துள்ளனர். ஆனால்,  சிலரோ அகங்காரத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். அதை ஓரம் வைத்துவிட்டால் நமது சமுதாயத்தில், நமது மாநிலத்தில், நமது நாட்டில் புரையோடிக் கிடக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இதை யாராவது பிரதமர் நரேந்திர மோடி யிடம் தெரிவிக்க வேண்டும். அதேபோல, அனுமன் சாலீசா பாடப்பட வேண்டியதுதான். ஆனால்,  மக்களின் பிரச்சனைகளும் முக்கிய மானவை. சிவசேனா கட்சியை சேர்ந்த உள்ளாட்சி உறுப்பினர்கள் மக்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும் மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சனைகளின் மீது கவலைப்படவும், கவனம் செலுத்தவும் வேண்டும். இதை நாம் ஒலிப்பெருக்கிகளில் அறிவிக்கவில்லை. ஆனால், இம்முறை சிவசேனாவின் பணிகளை ஒலிப்பெருக்கிகளில் சொல்ல வேண்டும்.” இவ்வாறு சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.