யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற ஏழு பேர் கைது இரண்டு யானை தந்தங்களை பறிமுதல்
தேனி, அக்.16- தமிழக கேரள எல்லையில் யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய முயன்ற ஏழு பேரை கைது செய்த வனத் துறையினர் இரண்டு யானை தந்தங்களை பறிமுதல் செய்துள்ளனர். தமிழக கேரள எல்லை பகுதியான குமுளி சோதனைச் சாவடி வழியாக யானைத்தந்தங்களை கடத்தி வந்து சிலர் யானை தந்தம் விற்க முயல்வதாக மதுரை வனத்துறை விஜிலென்ஸ் குழுவிற்கு ரகசியல் தகவல் கிடைத்துள்ளது. தகவலைத் தொடர்ந்து தமிழக எல்லையான குமுளி காப்புக்காடு எல்லைப்பகுதியில் வனத்துறையினர் தீவிர வாகான சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியே இரண்டு சக்கர வாகனத்தில் வந்த லோயர்கேம்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் (62) மற்றும் வெள்ளையன் (63) ஆகியோரை பரிசோதனை செய்தபோது இருவரும் நான்கு கிலோ எடை கொண்ட இரண்டு யானை தந்தங்களை விற்பனை செய்வதற்கு கொண்டு வந்தவர்கள் என்பது தெரியவந்தது.அவர்களிட மிருந்து யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டு யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மேத்யூ (53) ,ஜோன்சன் (51), நிதின் (30), அசோகன் (50), அப்துல்அஜீஸ் (34) ஆகிய ஏழு பேரையும் வனத்துறை யினர் கைது செய்தனர். யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்று தலைமறைவானவர்களையும் வனத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆண்டாள் கோவில் மேல் பறந்த ட்ரோன் ஜவுளிக்கடை ஊழியர்களிடம் போலீஸ் விசாரணை
திருவில்லிபுத்தூர். அக்.16- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தங்க விமா னத்தின் மீது ட்ரோன் பறந்த விவகாரத்தில் பிரபல ஜவுளிக் கடை ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வரு கின்றனர். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் உள்ள 33 அடி உயரமுள்ள விமானம் ரூ.24 கோடி மதிப்பிலான 78 கிலோ தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. தங்க விமான பாதுகாப்பிற்காக கோயிலின் மேல்தளத்தில் 24 மணி நேர மும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. இந்நிலையில் தங்க விமானத்தின் மேலே வான் பகுதியில் ட்ரோன் பறந்துள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அதை கண்காணித்த போது, ட்ரோன் அப்பகுதியில் இருந்த பிரபல ஜவுளிக்கடை நோக்கி சென்றது. இதுகுறித்து திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். ட்ரோன் பறந்தது குறித்த பிரபல ஜவுளிக்கடை ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினார்.
வத்திராயிருப்பு: பசுமை தோட்டத்தை பார்வையிட்ட திருப்பூர் உள்ளாட்சி பிரதிநிதிகள்
திருவில்லிபுத்தூர், அக்.16- விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் கோவிந்தநல்லூர் ஊராட்சியில் கிடை மட்ட உறுஞ்சுகுழி, குன்னூர் ஊராட்சியில் கலசலிங்கம் பல்க லைக்கழகம் எதிரில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் 3700 பழக்கன்றுகள் மற்றும் மூலிகைச் செடிகள் பசுமை விடி யல் திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு பணிகளும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் சிறந்த பணிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த பணிகளை திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் 104 பேர் நேரில் வருகை தந்து கோவிந்த நல்லூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கிடைமட்ட உறுஞ்சி குழியையும் குன்னூர் ஊராட்சியில் அமைக்கப் பட்டுள்ள பசுமை விடியல் தோட்டத்தையும் பார்வை யிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை குன்னூர் ஊராட்சி தலை வர் ஜெகதீஸ்வரி, கோவிந்தநல்லூர் ஊராட்சி தலைவர் செல்லக்கண்ணு மற்றும் வட்டார வளர்ச்சி அலு வலர்கள், ஊராட்சி செயலர்கள் முருகன், மாரியப்பன் ஆகியோர் இணைந்து செய்தனர். சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வருகிற குன்னூர் ,கோவிந்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர்களை திருப்பூர் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் பாராட்டி னர்.
விருதுநகர்: 37 பவுன் நகை; ரூ.4 லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு
விருதுநகர், அக்.16- விருதுநகரில் வாடிக்கையாளரிடம் 37 பவுன் நகை மற்றும் ரூ.4லட்சத்தை மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள் ளனர். விருதுநகர் அருகே சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த வர் முத்துக்குமார் (32). இவர் விருதுநகர் பஜார் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடைஉரிமையாளர் மண்டலே உத்தம் ஜோதிராம், அவரது மனைவி அஸ்வினி, மாமனார் யஷ்வந்த் ஆகியோரிடம் பழக்கம் ஏற்பட்டுளளது. இந்த நிலையில் முத்துக்குமார் தனக்கு சொந்த மான நகைகளை அடகு கடையில் வைத்திருப்பதாக தெரி வித்துள்ளார். அவரிடம் மண்டலே உத்தம் ஜோதிராம் நகைகளை என்னிடம் கொடுங்கள், வட்டி வேண்டாம் என்று கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து முத்துக்குமார் கடந்த 2021ம் ஆண்டு 37 பவுன் நகைகளைஅவரிடம் கொடுத்துள் ளார். மேலும் நகையை மீட்பதற்கு ரூ.4 லட்சம் கொடுத் துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட 3 பேரும் நகை-பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதுபற்றி முத்துக் குமார் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய் தார். அதன்பேரில் போலீசார் மண்டலே உத்தம் ஜோதி ராம், அஸ்வினி, யஷ்வந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் இதே போல் பலரிடம் மோசடி செய்து இருப்பது தெரிய வந்துள் ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
காலமானார்
மதுரை,அக்.16- மதுரை மேலூரைச் சேர்ந்த அ.லெனின் (வயது 31) காலமானார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டம் மேலூர் தாலுகாக்குழு உறுப்பினர் வீ. அடக்கி வீரணன் அவர்களின் மகன் ஆவார். அ. லெனின் உடல் நலக் குறைவால் மேலூர் தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலை யில் வியாழன்று காலை காலமானார். அவரது மறைவுச் செய்தி அறிந்து கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் கே. ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.பி. இளங்கோவன், த. செல்லக்கண்ணு, தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன், தாலுகாக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தோழர் அடக்கி வீரணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, ஆகியோர் இரங்கலை தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் மீது புகார் அளித்த நடிகை மருத்துவமனையில் அனுமதி
மதுரை, அக்.16- அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்த துணை நடிகை சாந்தினி வெள்ளியன்று காலை மதுரையில் உள்ள பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சந்திக்க முயன்ற தாகவும் அவர் சந்திக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று இராமநாத புரத்தில் உள்ள முன்னாள் அமைச்சரின் வீட்டிற்கு சென்று, அவரை சந்திக்க முயற்சித்த போது, முன்னாள் அமைச்ச ரின் தாயார். ஓட்டுநர் உட்பட 4க்கும் மேற்பட்டவர்கள் நடி கையை தாக்கியதாகவும். இதனையடுத்து உள்ளூர் காவல்துறையினர் வந்து மீட்டு சென்னை செல்ல அறி வுறுத்தினர். பின்னர் தனது காரில் சென்னை செல்லும் வழி யில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால். மேலூர் அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரையில் ஏரோஸ்பேஸ் பார்க் முதல்வரிடம் ஆலோசிக்கப்படும் அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
மதுரை, அக்.16- தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஓர்அங்கமான ‘டிஜிட்ஆல்’ (digit all) அமைப்பு சாா்பில் தகவல் தொழில் நுட்பக் கருத்தரங்கம் ‘சங்கமம் 2022’ மதுரையில் சனிக்கிழ மையன்று நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்றார். விழாவில் அமைச்சர் பேசுகையில், எல்லா மாவட்டத்தி லும் டிஜிட்டல்மயப்படுத்தும் பணிகள் துவங்கிவிட்டது. தென் தமிழகத்தை ஐ.டி துறையில் முன்னேற்றுவதற்கு எல்லா பணிகளும் நடைபெற்று வருகிறது. அதே போல் தமிழக முதல்வர் மதுரையில் புதிய தகவல்தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பதற்கான அறிவிப்புகளை வெளி யிட்டுள்ளார். ஏற்கனவே மதுரையில் இலந்தைக்குளம், வடபழஞ்சி ஆகிய இரண்டு ஐ.டி பூங்காக்கள் உள்ளது. இலந்தைகுளம் ஐடி பூங்கா முழுமையாக செயல்பட்டு வருகிறது, அதேபோல வடபழஞ்சி ஐடி பூங்கா 70 சதவீத இடங்கள் நிரம்பி விட்டன, அதன் தேவைக்கு ஏற்ப புதிய ஐடி பூங்கா அமைக்கப்படும், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் மதுரையில் ஏரோஸ்பேஸ் பார்க் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்படும். ஐ.டி துறையில் மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 30 சதவிதுவளர்ச்சி அடைந்து வருவாய் ஈட்டி யுள்ளது. திருநெல்வேலியில் ரோல் சென்டர் அமைப்ப தற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது என்று தெரி வித்தார். இதில் தொழில் முனைவோர், பட்டதாரி இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தஞ்சாவூர், அக்.16 - காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை யின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. அணையின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளள வான 120 அடியை எட்டியுள்ளதால், அணையில் இருந்து உபரி நீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில், 85,000 கனஅடி வரை திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 1.10 லட்சம் கனஅடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோரங்கள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் (24x7) இயங்கி வரும் மாவட்டக் கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண். 1077 மற்றும் தொலைபேசி எண்கள் 04362-264114, 04362- 264115 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு மழை, வெள்ளத்தினால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
பராமரிப்புப் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்
மதுரை, அக்.16- வெள்ளனூர் - புதுக்கோட்டை, திண்டுக் கல் - அம்பாத்துரை, ராஜபாளையம் - சங்க ரன்கோவில் ரயில் நிலையங்கள் இடையே பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற் காக ரயில் பாதை பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக திருச்சி - மானாமதுரை - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/ 06830) அக்டோபர் 16 முதல் அக்டோபர் 31 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சிவ கங்கை - மானாமதுரை ரயில் நிலையங் கள் இடையே பகுதியாக ரத்து செய் யப்படும். திண்டுக்கல் - அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கு இடையே நடை பெறப்போகும் பராமரிப்பு பணிகளால் அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை கோயம்புத்தூர் - நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில் (16322) செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடங்கள் காலதாம தமாக இயக்கப்படும். இதே காலத்தில் சென்னை - குருவா யூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழ மைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாக வும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் காலதாமதமாகவும் இயக்கப்படும். இத னால் இந்த மூன்று நாட்களுக்கும் குருவா யூர் விரைவு ரயிலுக்கு, வாஞ்சி மணி யாச்சி - தூத்துக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06672) இணைப்பு ரயிலாக செயல் படாது. மேலும் அக்டோபர் 27, 28 மற்றும் 31 ஆகிய நாட்களில் பாலக்காடு - திருச் செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில்கள் (16731/16732) திண்டுக்கல் - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். ராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரி வில் ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை (06663), செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் கள் அக்டோபர் 16 முதல் அக்டோபர் 31 வரை முழுமையாக ரத்து செய்யப்படும். கொடைக்கானல் ரோடு மற்றும் வாடிப் பட்டி ரயில் நிலையங்களில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கி றது. இதன் காரணமாக அக்டோபர் 17 முதல் அக்டோபர் 22 வரையும் மற்றும் அக்டோ பர் 26 முதல் அக்டோபர் 29 வரையும் மதுரை - விழுப்புரம் விரைவு ரயில் (16868) மதுரை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என்று மதுரை கோட்ட நிர்வா கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.