போபால், பிப். 16 - ஜிகாதிகளின் (முஸ்லிம்களின்) கழுத்தை வெட்டியெடுப்பதற்காக, இந்துப் பெண்கள் தங்களின் பணப்பைகளில் எப்போதும் கத்தி யை வைத்திருக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிசத்தைச் சேர்ந்த பெண் சாமியார் சாத்வி பிராச்சி வன்முறையைத் தூண்டியுள்ளார். ஜமியத் உலமா-இ-ஹிந்தின் (மதானி பிரிவின்) ஆண்டுக் கூட்டத்தில் ‘ஓம் அல்லது அல்லா’ தலைப்பில் பேசிய மவுலானா மஹ் மூத் மதானி, “இந்தியா இஸ்லாத்தின் பிறப் பிடம்” என்றும், “பிரதமர் நரேந்திர மோடியை போலவே தனக்கும் இந்த நாடு சொந்த மானது” என்றும் கூறியிருந்தார். “இஸ்லாத்தின் முதல் நபி ஆதம் இங்கு தான் அவதரித்தார் என்று கூறும் போது இஸ்லாம் வெளியில் இருந்து வந்தது என எப்படி கூற முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், சாத்வி பிராச்சி, மத்தியப் பிரதேச மாநிலம் அனாதி கல்பேஷ்வர் கோயி லுக்குச் செல்வதற்காக அலோட் நகருக்கு வந்திருந்தார்.
அப்போது மவுலானா மஹ்மூத் மதானிக்கும் பதிலளிக்கிறேன் என்ற பெயரில் மதவெறுப்பைக் கக்கினார். “மதானிக்கு இந்து மதத்தின் ஏ,பி,சி,டி. கூட தெரியாது” என்று கூறிய அவர், “இந்தியா ஒரு இந்து நாடாக இருந்தது, எதிர்காலத்தி லும் அது அப்படியே இருக்கும். 1947-இல் நாடு பிரிந்ததற்கு மதானி போன்றவர்கள்தான் காரணம். மதானியின் முன்னோர்கள் 100-200 ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாறினார்கள். இப்போது அவர்கள் வீடு (இந்து மதத்திற்கு) திரும்ப வேண்டிய நேரம் வந்து விட்டது” பேசியுள்ளார். மேலும், “இந்துப் பெண்கள் தங்களின் பணப்பையில், சீப்பு மற்றும் உதட்டுச்சாயம் ஆகியவற்றை வைத்திருக்கக்கூடாது. மாறாக, ஜிகாதிகளை (முஸ்லிம்களை) எதிர்கொள்ள பெண்கள் கத்திகளை வைத் திருக்க வேண்டும். தில்லியின் ஷ்ரத்தா வால்கர் சம்பவத்தைப் போல ‘லவ் ஜிகாதி கள்’ உங்கள் கழுத்தை அறுத்துக் கொலை செய்வதற்கு தயாராக இருந்தால், அதற்கு முன்னர் நீங்கள் (இந்து பெண்கள்) அவர் களின் கழுத்தை அறுத்து விட வேண்டும். முஸ்லிம்கள் தங்கள் மதத்திற்காக இருப் பது போல இந்தியாவிலுள்ள அனைத்து இந்துப் பெண்களும் ஆச்சாரமாக இருக்க வேண்டும்” என்றும் வன்முறையைத் தூண்டியுள்ளார்.