states

வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் கைதுக்கு கண்டனம்

சென்னை, ஆக. 30- வருவாய்த்துறை அலு வலர் சங்கத்தின் நிர்வாகி கள், உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதற்கு  தமிழ் நாடு தலைமைச் செயலகச் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது.இதுகுறித்து  சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன், இணைச் செயலாளர் இரா.லெனின் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்திய கள்ளக் குறிச்சி வட்டாட்சியர் பணி யிடை நீக்கம் செய்யப் பட்டதைக் கண்டித்து, தமிழ் நாடு வருவாய்த்துறை அலு வலர் சங்கத்தினர் கள்ளக் குறிச்சி, சேலம், விழுப்பு ரம், கடலுார், திருவண்ணா மலை ஆகிய ஐந்து மாவட் டங்களில் செவ்வாயன்று (ஆக. 29) காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல முயன்ற வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தி னரை காவல்துறையினர் கைது செய்தனர். ஜனநாயக வழியில் அறப்போராட்டத்தில் ஈடு பட்ட வருவாய்த்துறை அலு வலர் சங்கத்தின் நிர்வாகி கள் மற்றும் உறுப்பினர் களை கைது செய்ததற்கு தமிழ்நாடு தலைமைச் செய லகச் சங்கம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. வருவாய்த்துறை அலு வலர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி, பிரச்ச னைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.