states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஆர்எஸ்எஸ் கோரிக்கை நிராகரிப்பு

சென்னை, அக்.30- ஆர்எஸ்எஸ் தாக்கல் செய்த முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கவில்லை எனக் கூறி காவல்துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முறையீடு செய்தார். இந்த முறையீட்டை  நீதிபதி ஜெயச் சந்திரன் ஏற்க மறுத்து விட்டார்.

செந்தில்பாலாஜி ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

புதுதில்லி, அக்.30- சட்டவிரோத பணப்பரி மாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப் பட்டு, சென்னை புழல் சிறை யில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு திங்களன்று (அக்.,30) விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து மனு  மீதான விசாரணை நவம்பர்  6-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நவ.6 முதல் மீனவர்கள் உண்ணாவிரதம்

இராமேஸ்வரம், அக்.30- கடந்த 15 நாட்களில் மூன்று வெவ்வேறு சம் பவங்களில் இராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம் மற்றும் ராமநாதபுரம் மாவ ட்டத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.67 மீன வர்கள் இலங்கைக் கடற் படையால் கைது செய்யப் பட்டுள்ளனர். இது மீனவர்களிடையே அதிர்ச்சி யையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மீனவர்களை விடுவிக்க வேண்டும். படகுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் நவம்பர் 6 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக மீனவர் சங்கத் தலைவர்களில் ஒருவரான பி.ஜேசுராஜா அறிவித்துள்ளார்.

விஜயபாஸ்கர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

சென்னை, அக்.30- கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் (2016- ஏப்ரல் 1 முதல் 2021 மார்ச் 31  வரை) ரூ. 35.79 கோடி வரு மானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல்  தடுப்பு மற்றும் கண்காணி ப்புப் பிரிவு காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து கடந்த மே 22-ஆம் தேதி  210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசார ணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை நவம்பர். 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.

நவ-1 முதல் அகதிகளை வெளியேற்றும் பாக் 

இஸ்லாமாபாத்,அக்,30- முறையான ஆவணமற்ற அகதிகள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விதித்திருந்த காலக்கெடு அக்,31 உடன்  முடிவடைகிறது. இந்நிலையில் அவர்கள்  தானாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேறாவிட்டால்  அரசே வெளியேற்ற துவங்கும் என பாகிஸ்தான் இடைக்கால அரசு மீண்டும் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில்  சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாட்டை விட்டு வெளியேற அக்டோபர் 31-ஆம் தேதி  வரை கெடுவிதித்திருந்த நிலையில் 17 லட்சம் ஆப்கானிஸ்தா னியர்கள்  உட்பட  வெளியேறாத அகதிகளை நவம்பர் 1  முதல் இடைக்கால அரசே வெளியேற்றும் என உள்துறை அமைச்சர் சர்ஃப்ராஸ் புக்டி திங்களன்று தெரிவித்தார். 

முதல்வருக்கு  அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்

சென்னை, அக்.30- உயிர்காக்கும் உன்னத பணியை  மேற்கொள்ளும் அரசு மருத்துவர்களின் ஊதிய கோரிக்கையை அரசு உடனடி யாக நிறைவேற்ற வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு கட்சி  தலைவர்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர். எனவே, அக்டோபர் 31 அன்று  நடை பெறும் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில், கொரோனாவால் உயிரி ழந்த அரசு மருத்துவர் விவேகானந் தன் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் அறிவிப்பையும் கலை ஞரின் அரசாணை 354 அமல்படுத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் மரு. எஸ். பெருமாள் பிள்ளை அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

பாஜக நிர்வாகிக்கு  போலீஸ் காவல்

சென்னை, அக்.30- பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை விசாரிக்க 5 நாள் போலீஸ் காவல் கோரிய நிலையில் ஒரு நாள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து 3 வழக்குகளில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி  கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட கொடிக் கம்பத்தை அகற்றும்போது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் அமர் பிரசாத் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

கருக்கா வினோத்திற்கு 3 நாட்கள்  போலீஸ் காவல் 

சென்னை, அக்.30- கடந்த 25 ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பெட்ரோல் குண்டு வீ சப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் புழல் சிறை யில் அடைக்கப்பட்டார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கிண்டி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில், திங்களன்று (அக்.30) புழல் சிறை அதிகாரிகள் பலத்த காவல் பாதுகாப்புடன் கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் 9-வது அமர்வு பொறுப்பு  நீதிபதி சந்தோஷ் முன்பு ஆஜர்படுத்தி னர். இதையடுத்து போலீசார் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கருக்கா வினோத்தை காவலில்  எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதன்படி கருக்கா வினோத்தை வருகிற நவம்பர் 1 ஆம்  தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து  விசாரிக்க அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. இதையடுத்து கிண்டி காவலர்கள் அவரை விசாரணைக்காக அழைத்துச் செல்வதற்கான பணிகளில்  ஈடுபட்டு வருகின்றனர்.