குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வெளியேறினார் ராம்நாத் கோவிந்த்
புதுதில்லி, ஜூலை 25- நாட்டின் 15-ஆவது புதிய குடிய ரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவி யேற்றதையடுத்து குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடிய ரசுத்தலைவர் மாளிகையிலிருந்து வெளி யேறினார். குடியரசுத் தலைவராக பதவி யேற்ற திரௌபதி முர்முவை நாடாளு மன்றத்தில் இருந்து குடியரசுத்தலைவர் மாளிகைக்கு அழைந்துச் சென்ற ராம் நாத் கோவிந்த், பின்னர் முப்படையின ரின் அணிவகுப்பு மரியாதையுடன் அங்கி ருந்து புறப்பட்டு ஜன்பாத் சாலையில் ஒதுக்கப்பட்டுள்ள புதிய இல்லத்திற்கு சென்றார்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
விருதுநகர், ஜூலை 25- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட கணித ஆசிரியர், பணியிடை நீக்கம் செய் யப்பட்டார். 10-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு கணித ஆசிரியர் தாமோதரன் பாலியல் தொந்தரவு தந்ததாகக் கூறி பெற் றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கௌரி பெற்றோ ரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தாமோதரனை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
இமாச்சலில் மேக வெடிப்பு: கொட்டித் தீர்த்த கனமழை
இமாச்சலம், ஜூலை 25- இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் ஏற்பட்ட மேக வெடிப்பைத் தொடர்ந்து பெய்த கனமழையால் பியாஸ் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மணாலி, குலு மாவட்டங்களில் ஞாயி றன்று இரவு முதல் இடைவிடாமல் பெய்த கனமழையால் பல்வேறு மலைப் பாதைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. கனமழையால், இரவோடு, இரவாக பெரும் இன்னல்களுக்கு இடையே, பாது காப்பான இடங்களுக்கு மக்கள் சென்றனர். பியாஸ் ஆற்றில் அபாயத்தை தாண்டி செல்லும் தண்ணீரில், மரப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் மலை கிராமங்க ளுக்கு செல்லும் போக்குவரத்து தடை பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடங்குளம் அணு உலையில் பராமரிப்புப் பணி 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு
திருநெல்வேலி, ஜூலை 25- நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1 மற்றும் 2-வது அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணு உலைகள் மூலம் தினமும் தலா 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் அணு உலை களில் எரிந்த யுரேனியம் எரிகோல் களை மாற்றும் பணிகள் நடைபெறும். அதையொட்டி அணு உலைகளில் மின் உற்பத்தி நிறுத்தப்படும். அதன் படி இந்த ஆண்டும் அணுமின் நிலை யத்தின் முதல் அணு உலையில் பராம ரிப்புப் பணிக்காக மின் உற்பத்தி ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 40 நாட்களுக்கு பிறகு பணி கள் முடிவடைந்தபின் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படும் என அணு மின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. இதன் காரணமாக 1000 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந் துள்ளது.
ஜனாதிபதி முர்முவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, ஜூலை 25- குடியரசுத் தலைவராக பதியேற்ற திரௌபதி முர்முவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தி வருமாறு: “நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது ஜன நாயக கொள்கையின் மீது நாட்டின் நம்பிக்கையும், பலத்தையும் வெளிப் படுத்துகிறது . இந்தியக் குடியரசுத் தலைவராக உங்கள் சேவைகளால் நாடு பயனடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், வாழ்த்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார். இதேபோல், இந்திய குடியரசுத் தலைவராக தனது பணியை நிறைவு செய்துள்ள ராம்நாத் கோவிந்திற்கும் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித் துள்ளார். அதாவது, “ஆகஸ்ட் 2021-இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேர வையின் நூற்றாண்டு விழாவில் எனது அழைப்பை ஏற்று தாங்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததை இத்தருணத் தில் நினைவு கூறுகிறேன். நாட்டின் குடியரசுத் தலைவராக எங்கள் மாநிலத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு தங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தங்களின் வளமான அனுபவத்தால் நாடு தொடர்ந்து பயன்பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நல்ல உடல் நலத்துடன் அமைதியான வாழ்வு அமைந்திட வாழ்த்துகிறேன்” என கூறியுள்ளார்.
9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை, ஜூலை 25- தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், ‘மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரண மாக செவ்வாயன்று(ஜூலை 26) அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்பு ரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூலை 27ஆம் தேதியும் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழ்நாடு மாவட்டங்கள், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல், திருச்சிஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.