மதுரை, ஏப்.19- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பு வருமாறு: பி.எஸ்.என்.எல் காண்ட் ராக்ட் ஊழியர் சம்பளப் பாக்கி குறித்து நான் எழுதிய கடி தத்திற்கு தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் பதில் அளித்துள் ளார். நான் கடிதம் போட்டது 2.11.2021 அன்று. பதில் வரு வது 11.04.2022 அன்று. செப் டம்பர் 2021 வரை பல இடங்க ளில் ஊதிய பாக்கி தரப்பட்டு விட்டது என்று பதில். எல்லா இடங்களிலும் தரப்பட்டுவிட் டதா என்ற தகவலும் அதில் இல்லை. பி.எஸ்.என்.எல் ரூ.32 கோடி மண்டல தொழிலாளர் ஆணையர் வாயிலாக தந்தது சென்னை உயர் நீதிமன்ற ஆணையின் அடிப்படை யில்... இன்னொரு ரூ.40.94 கோடி தந்திருப்பதாக சொல்லி இருக்கிறார். ஏப்ரல் 2022 இல் இவர்கள் பதில் தருவதற்குள் இன்னும் 6 மாத கால ஊதிய பாக்கி ஆகி விட்டது. அரசு நிறுவனமே இப்படி தொழிலாளர்களை பட்டினி போட்டால் தனியார் நிறுவ னங்கள் என்ன ஆட்டம் போடும்! பொதுத் துறை நிறு வனங்கள் “மாதிரி பணிய மர்த்துபவர்” என்ற கோட்பாடு உலகமய காலத்தில் காற்றில் பறக்கிறது. இன்று “தனியார் மாதிரி” தொழிலாளர் உரிமை களை, பயன்களை பந்தாட ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் உழைப்புக்கான ஊதியத்தையே கேட்கிறார் கள். ஆறு மாத கால பாக்கி என்றால் எப்படி வாழ்க்கை நடத்துவது! ஒன்றிய அரசே, பி.எஸ்.என்.எல் நிர்வாகமே உட னடியாக ஊதிய பாக்கிகளை வழங்க வேண்டும். ஊதியம் வழங்கலை முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.