சென்னை, அக். 19- ஊழலைப்பற்றிப் பேசும் பிரதமர் மோடி, அதானியின் ஊழல் பற்றி வாய்த் திறக்காதது ஏன் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பி யுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழலை ஒழிக்கிறோம் என்று மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கும் மோடி அரசு, அண்மைக்கால மாக நாட்டின் நம்பர் ஒன் பெருமுதலா ளியாக குறுகிய காலத்தில் விஸ்வ ரூபம் எடுத்துள்ள அதானி குறித்தோ, எரியும் மணிப்பூர் பற்றியோ பிரதமர் மோடி வாய்த் திறக்காதது ஏன்? அதானி நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள், சட்டத் திருத்தங்கள், அவர் நடத்தியதாகச் சொல்லப்படும் அண்மை ஊழல் குற்றச்சாட்டுகள், இந்தோனேசியா நிலக்கரி இறக்குமதியில் 12,000 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றியெல்லாம் உரிய விளக்கம் அளிக்க மறுப்பதேன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.