states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

  1. நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து, இந்தியாவின் விடு தலைக்காகப் போராடிய வீரமங்கை அஞ்சலை பொன்னுசாமி அம்மாள் (102) புதனன்று மலே சியாவில் காலமானார்.
  2. தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத் துறை கைது செய்ததை யடுத்து அவரது பொறுப்பு கள் தில்லி துணை முதல் வர் மணீஷ் சிசோடியா வுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  3. தில்லி உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகளாக புரு ஷேந்திர குமார் கௌரவ், அனிஷ் தயாள் மற்றும் அமித் ஷர்மா ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்ட னர்.
  4. ஆந்திராவிலிருந்து பிரி ந்து 2014 ஜூன் 2-ஆம் தேதி தெலுங்கானா தனி மாநிலமாக உருவாகி 8 ஆண்டுகள் நிறைவு பெற்றது. குடியரசுத் தலை வர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலை வர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தெலுங்கானா மக்களுக்கு வாழ்த்து தெரி வித்துள்ளனர்.
  5. கடந்த 8 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குச் சொந்த மான 228 சிலைகள் உள்ளி ட்ட தொல்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர்கள் கிஷண் ரெட்டி, அர்ஜுன் ராம் மேக்வால், மீனாட்சி லேகி ஆகியோர் தெரி வித்தனர்.
  6. நீலகிரி மாவட்டத்தி லுள்ள வனப்பகுதியின் வனவளம் தமிழக அரசின்  வனத்துறையால் மிகவும் பொறுப்புடன் பாது காக்கப்படுகிறது என்று  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீ ஸ்வர் நாத் பண்டாரி  பாராட்டு தெரிவித்துள் ளார்.
  7. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வா ரியம் அமைக்கப்பட்டு, மாநில ஆணையர் உறுப் பினர் செயலாளராகவும், பள்ளிக்கல்வி, உயர்க் கல்வி, போக்குவரத்துத் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட 12 துறை களை சேர்ந்த முதன்மை செயலாளர்கள் உறுப்பினர் களாகவும், அலுவல் சாரா உறுப்பினர்களாக மூன்று சட்டமன்ற உறுப் பினர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
  8. தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் எழுதாத 6.79 லட்சம் மாணவர்களை கண்டறிந்து துணைத் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கக் கோரி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
  9. குரங்கு அம்மை இதுவரை 550-க்கும் மேற்பட்டோ ருக்கு உறுதி செய்யப் பட்டுள்ளதாக உலக சுகா தார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேய்ஸ்தெரிவித்தார். 
  10. பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்கள் அன்றாட நடவடிக்கைகளாக மாறிவிட்டது என்று பாலஸ்தீன பிரதமர் முகமது இஸ்டயே  குற்றம் சாட்டியுள்ளார். பாலஸ்தீனத்தின் மேற்குக்கரைப் பகுதி நகரமான ரமல்லாவில் நடந்த கூட்டமொன்றில் பேசுகை யில், “இந்த நடவடிக்கைகளைக் கண்டிப்பதைத் தாண்டி தடை களை போட வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்தக் கூட்ட த்தில் டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
  11. பல்வேறு துறைகளில் பார்படாசுக்கு உதவப்போவதாக வெனிசுலா அறிவித்திருக்கிறது. மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், வறுமைக் குறைப்பு மற்றும் குழந்தைகள் நலன் ஆகியவற்றில் சமூக நலத்திட்டங்கள் மூலம் மேம்பாட்டுக்கு வழி வகுக்க வெனிசுலா உதவப்போகிறது. பார்படாசில் உள்ள தனது தூதரகத்தின் மூலமாக இந்தப் பணிகள் நடக்கும் என்று பார்படாசுக்கான வெனிசுலா தூதுவர் மார்த்தா காப்ரியலா ஓர்டேகா பெரசா கூறியுள்ளார்.
  12. கோடை கால அறுவடையை மக்கள் சீனம் தீவிரப்படுத்தியுள்ளது. போதிய அளவு உணவு தானியங்கள் விநியோகம் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த அறுவடையை முடுக்கி விட்டிருக்கிறார்கள். நாட்டின் உணவு தானிய உற்பத்தி இலக்கை அடைய வேண்டுமென்றால் கோடைக்கால அறுவடை மிகவும் முக்கியமானது என்று கடந்த வாரம் கூட்டமொன்றில் பேசுகையில் சீனப் பிரதமர் லி கெகியாங் தெரிவித்திருந்தார்.