சென்னை, ஜூலை 31- ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் மாளி கையை சதியாலோசனை மண்டப மாக பயன்படுத்துகிறார் என்று மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றி அனுப்பப்படும் சட்ட மசோ தாக்களுக்கு முறையாக ஒப்புதல் அளிப்பது நீங்கலாக, அனைத்துச் செயல்களையும் செய்து கொண்டி ருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். திருக்குறள் மொழிபெயர்ப்பு சரியாக இருக்கிறதா? வள்ளலார் பாட்டு முறையாக இருக்கிறதா? என்பதைப் பார்ப்பது முதல், சனாதனம் குறித்து தனது ஆய்வை தினமும் செய்து கொண்டு வரு கிறார். திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே அவருக்கு எரிகிறது. பாஜகவின் முந்தைய தலை வர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயாவின் நூலை வெளி யிட்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கும் ‘திராவிடம் பற்றிய பேச்சு பிரிவினையைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது’ என்று பேசி இருக்கிறார். அவருக்கு தமிழ்நாடு என்ற சொல் பிடிக்கவில்லை என்பதற் காக, தமிழ்நாடு என்ற மாநிலத்தின் பெயரை மாற்றிக் கொள்ள முடி யாது. ஆளுநராக வந்தவர், இந்த மாநிலத்திற்கு ஆக்கப்பூர்வமாக ஏதா வது செய்திருக்கிறாரா என்றால் அது வும் இல்லை. தினமும் ஏதாவது புலம் பிக் கொண்டு இங்குள்ள அரசியல் களத்தை குழப்ப முயற்சித்து வரு கிறார். ஆளும் திமுக அரசுக்குக் குடைச்சல் ஏற்படுத்தி வருகிறார். சனாதன, வர்ணாசிரம சக்திக ளுக்கான திண்ணைப் பிரச்சாரக் கள மாக ஆளுநர் மாளிகையை மாற்றிக் கொண்டு வருகிறார். ஆளுநர் பதவி, என்பது மாநில அரசு நிர்வாகத்தின் ஓர் அங்கம் என்பதை மறந்து அர சுக்கு எதிரானவர்களோடு சேர்ந்து சதி ஆலோசனை மண்டபமாக, கிண்டி ஆளுநர் மாளிகையை பயன்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித் திருக்கிறார்.