states

முறையான ஆய்வின்றி புலியூரில் கல்குவாரிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி வழக்கு

ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மார்ச் 18-  முறையாக ஆய்வு செய்யாமல் விருது நகர் மாவட்டம் புலியூர் கிராமத்தில் கல் குவாரிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   இதுகுறித்து நீதிராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,  “ விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா புலியூர் கிரா மத்தில் பெரும்பாலும் விவசாயம்  மேற்  கொண்டு வருகின்றனர். கிராமத்தில்  விவ சாயத்திற்கும் குடிநீருக்கும் அத்தியாவசி யமாக புலியூர் கண்மாய் அமைந்துள்  ளது. கண்மாய்க்கு மிக அருகாமையி லேயே சாஸ்திரி என்பவருக்கு மாவட்ட  நிர்வாகம் கல்குவாரி நடத்துவதற்கு 5 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கியிருக்கி றது. இந்த குவாரிக்கு செல்வதற்கு என தனியான வழி கிடையாது.

இதனால் புலி யூர் கண்மாயை ஆக்கிரமிப்பு செய்து அதில் பாதை அமைத்து கல்குவாரிக்கு பயன்படுத்தி வருகின்றனர். கல்குவாரி அருகாமையிலேயே ரயில்வே கேட்டும் அமைந்துள்ளது. நாள்தோறும் பல்வேறு வாகனங்கள் டன் கணக்கில்  கற்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஊருக் குள் தொடர்ச்சியாக செல்வதால் பொது மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படு கிறது. முறையான விசாரணை மேற்  கொள்ளாமல் அதிகாரிகள் கல்குவாரி  நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ள னர் இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு  அளித்தும் எந்த விதமான நடவடிக்கை யும் இல்லை. எனவே முறையாக விசா ரணை மேற்கொள்ளாமல் குவாரி செயல்பாட்டிற்கு அனுமதி வழங்கியதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று  கோரியிருந்தார்.  இந்த மனு மீதான விசாரணை நீதி பதிகள் ஆர். சுப்பிரமணியன், விக்டோ ரியா கௌரி அமர்வு முன்பாக சனிக்கிழ மையன்று நடைபெற்றது.  அப்போது நீதிபதிகள், மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து விருதுநகர் மாவட்ட  ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு சர்வே  வரைபடத்துடன் நீதிமன்றத்தில் அறிக்கை  தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.