states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆங்கிலேயர்களுக்கு உதவியது மட்டுமல்லாமல் சுதந்திர போராட்ட த்திற்கு போராடிய மகாத்மா காந்தி, நேரு போன்ற தலைவர்களுக்கு துரோ கம் செய்தவர் தான் சாவர்க்கர் என காங்கிரஸ் யாத்திரையில் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா கொலைக்குற்றவாளி யான அப்தாப் பூனாவாலாவிற்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவலை நீட்டித்து தில்லி நீதி மன்றம். காதல் திருமணம் செய்த  ஷ்ரத்தாவை அப்தாப் 35 துண்டு களாக வெட்டி கொலை செய்தார்.

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் பணி புரிந்து வரும் 254 பேராசிரியர்களின் பணி நியமனங்கள் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அடிப்படையில் ஜெயலலிதா மர ணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை  உயர்நீதிமன்றம். தமிழ்நாடு அரசு, சிபிஐ ஆகியவற்றிடம் மனு கொடு க்காமல் நேராக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசார ணைக்கு உகந்தது அல்ல என  நீதி பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மெட் ராஸ் ஐ (கண்வலி) பாதிப்புக்குள்ளான மாணவர்கள், ஆசிரியர்கள் கட்டாய விடுப்பு எடுக்கலாம் என திருநெல் வேலி மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை அருகே கோவில் களில் திருடிவிட்டு ஆட்டோவில் தப்பிச் சென்ற கொள்ள கும்பலை ஊர் இளைஞர்கள் தாக்கினர். தாக்கு தலில் 10 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், தாக்குதல் நடத்திய  ஊர்  இளைஞர்கள் குழுவில் 5 பேரை காவ லில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

வெனிசுலாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கான விமானப் பயணங்களை மேற்கொள்வதற்கு பன்னிரெண்டு விமான நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளன. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள வெனிசுலாவின் விமானப் பயணங்களுக்கான மையத்தின் தலைவர் ஜூவான் மானுவல் டெக்ஸ்சிரா, “சர்வதேச விமான நிறுவனங்களிடமிருந்து வெனிசுலாவை இணைக்கும் பயணங்களுக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளன. விரைவில் அனுமதி தரப்படும்” என்று கூறியுள்ளார்.

குவைத்தில் ஏழு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக இந்நாட்டில் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளார்கள். தற்போது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதில் இரண்டு பேர் பெண்களாவர். இரண்டு பெண்களில் ஒருவர் எத்தியோப்பியாவையும், மற்றொருவர் குவைத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்கிரமிப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் எழுப்பப்பட்டுள்ள இனவெறிச் சுவரை மேலும் பலப்படுத்த இஸ்ரேல் முடிவு செய்திருக்கிறது. பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், சுவரில் ஒரு பகுதியை இடித்து விட்டுப் புதிதாக கட்டத் திட்டமிட்டுள்ளனர். முதலில் 50 கிலோ மீட்டர் தொலைவிற்கான சுவருக்கான நிதியை ஒதுக்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்த சுவரும் ஆக்கிரமிப்பு நிலங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாகும்.