states

கொலை செய்யப்பட்ட மஸ்தான்: 5 பேர் கைது

சென்னை,டிச.30- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  மஸ்தான் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை கொலை செய்த தாக உறவினர் உட்பட 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த வர்  முன்னாள் எம்.பி., மஸ்தான். இவர்  திமுகவின் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளராகவும் மாநில சிறு பான்மையினர் நல ஆணைய துணைத் தலைவராகவும் இருந்தார். கடந்த  22 ஆம் தேதி மாலையில் இவரது மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற  இருந்தது. இதற்காக டிசம்பர்  21 ஆம் தேதி இரவு 11 மணிக்கு தனக்கு வர வேண்டிய பணத்தை வாங்கி வருவதற்காக உறவினர் இம்ரான் என்பவருடன் சென்னையில் இருந்து திருச்சிக்கு காரில் சென்றார். டிசம்பர் 22 அன்று அதிகாலை 1:30  மணியளவில்  கார் ஊரப்பாக்கம் பகுதியில்  சென்றபோது, மஸ்தானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும்,  அவரை மருத்துவமனை யில் சேர்த்து சிகிச்சை பலனின்றி, உயிரி ழந்ததாகவும் உடன் சென்ற உறவினர் இம்ரான் தெரிவித்தார்.  ஆனால் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் மஸ்தான் மூச்சுத் திணறலால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மருத்துவரான அவரது மகன் ஹாரீஷ் கூடுவாஞ்சேரி காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவத்தன்று மஸ்தானுடன் காரில் சென்ற  அவரது மருமகன் இம்ரான் உள்ளிட்ட 5 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.  தனக்கு கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு வற்புறுத்திய மஸ்தானை,  இம்ரான்  தனது நண்பர்களுடன் சேர்ந்து  காரில் வைத்து அவரின் முகத்தை அமுக்கி கொலை செய்ததும் இதனை மறைக்க மாரடைப்பு நாடகமாடியதும் விசாரணை யில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இம்ரான், சுல்தான் அகமது, நசீர், தவ்பிக், லோகேஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.