சென்னை, ஜூன் 21- அதிக வட்டி தருவதாக பொதுமக்க ளிடம் பணம் வசூலித்த ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை முடக்கியுள்ளது. சென்னை அமைந்தகரையில் தலை மையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் உரிமையாளராக பி.ராஜசேகரன் என்பவர் உள்ளார். இந்நிறுவனத்திற்கு தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த நிதி நிறுவனம் நகை மீதான கடன் மற்றும் முதலீடு உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் இந்த நிதிநிறுவனம் பெயரில் வெளி யான விளம்பரத்தில் , நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 36 ஆயிரம் ரூபாய் வட்டியாக கொடுக்கப்படும் என்று சமூக வலைதளங்கள் மூலம் வெளியானது. இந்த விளம்பரத்தை நம்பி அதிகளவில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிக வட்டி குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினருக்கும் வருவாய்த் துறையினருக்கும் புகார் அளிக் கப்பட்டது. இதன்படி ஆரணி ஆருகே சேவூர் பகுதியில் இயங்கி வரும் ஆருத்ரா நிறுவன அலுவலகத்தில் காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண் டனர். இதில், சேவூர் கிளையில் மட்டும் ரூ.1.50 கோடிக்கு மேல் பொதுமக்கள் முத லீடு செய்திருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த நிதி நிறுவனம் சார்பில் பொதுமக்கள் யாரிடமும் பணம் வசூலிக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
இதுகுறித்து பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையின் கவனத்திற்கு வரு வாய் துறை அதிகாரிகள் கொண்டு சென்ற னர். ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்திற்கு சொந்தமான திருவள்ளூர், திருவண்ணா மலை, வேலூர் உட்பட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் ஒரே நேரத்தில் அதி ரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 60 கிராம் தங்க நகைகள், 2 சொகுசு கார்கள் மற்றும் ரூ.3.41 கோடி ரொக்க பணம், 11 வங்கி கணக்கு ஆவணங்கள் பறிமுதல் செய் யப்பட்டது. இதுதொடர்பாக நிறுவன இயக்குநர்கள் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். முதன்மை இயக்குநர்களான பாஸ்கரன், மோகன் பாபு ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை யினர் கைது செய்தனர். பெண் நிர்வாகிகள் உட்பட 6 பேரை தேடி வருகின்றனர். இதன்பின்னர், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பொரு ளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கணக்காய்வு செய்தனர். அதில், பொதுமக்க ளிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது உறுதியானது. அதைத்தொடர்ந்து ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் நிறுவனத்தின் 70 வங்கி கணக்கு களை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் முடக்கினர்.