states

img

கருப்பு தீபாவளி கடைப்பிடித்த தொழிலாளர்கள்

கிராமப்புற ஏழை, எளிய  மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் ஊரக வேலை திட்டத்திற்கு ஒன்றிய பாஜக அரசு போதிய நிதி  ஒதுக்கீடு செய்யாமல் சரி வர வேலையும் வழங்காமல் செய்த வேலைக்கு கூலியும் வழங்காமல் வஞ்சித்து வருகிறது. தற்போது கடந்த ஜூலை  மாதத்திற்கு பிறகு இத்திட்டத்  தில் வேலை செய்த தொழிலாளர் களுக்கு தமிழ்நாட்டில் 2696 கோடி  ருபாய் சம்பளம் வழங்காமல் ஏமாற்றி வந்தது. இதனைக் கண் டித்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் பல்வேறு கட்டப் போராட்டங்களை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்தி வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பி னர்கள் நாகை மாலி, எம். சின்ன துரை ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந் தித்து, ஊதிய பாக்கிகளைப் பெற்  றிட ஒன்றிய அரசை வலியுறுத்த  கோரினர். விதொச மாநில நிர்வாகி கள் ஊரக வளர்ச்சித் துறை செய லாளரை சந்தித்து வலியுறுத்தினர். ஆகஸ்ட் 25 தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம், அக்டோபர் 11 ஒன்  றிய அரசு அலுவலகங்களுக்கு முன்  பாக கண்டன இயக்கம், நவம்பர் 6 அன்று நூற்றுக்கணக்கான மையங்களில் ஒப்பாரி வைக்கும்  போராட்டம் என தொடர்ச்சியாக அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கம் போராட்டங்களை நடத்தி வந்தது.  இந்நிலையில் ஒன்றிய அரசு

 இரண்டு வாரம் முதல் 12 வாரம்  வரை ஊதிய பாக்கி இருக்கும் போது இரண்டு வாரம் முதல் நான்கு  வாரம் வரையிலான பாக்கிகளை மட்டுமே தொழிலாளர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியது. ஐந்து முதல் ஏழு வாரங்கள் வரை  இப்போதும் ஊதியம் வழங்காமல்  உள்ளது. தீபாவளி பண்டிகைக் குள்ளாவது ஊதிய பாக்கி முழு வதும் கிடைத்து விடும் என்று  எதிர்பார்த்து இருந்த ஏழை மக்க ளுக்கு மோடி அரசின் அலட்சியம் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. தீபாவளி கொண்டாட்டத்தை ஒன் றிய பாஜக அரசு திண்டாட்டத்தில் தள்ளியது. இந்நிலையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங் கம், மோடி அரசின் நயவஞ்சக நட வடிக்கையை கண்டித்து, நவம்பர்  12 அன்று தீபாவளியை கருப்பு  தீபாவளியாக அறிவித்து கிராமங் கள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி கண்டனம் முழங்க அறைகூவல் விடுத்திருந்தது. அதன்படி, தமிழ்நாடு முழு வதும் 300க்கும் மேற்பட்ட மையங்  களில் கருப்புக் கொடி ஏற்றியும்,  கண்டன முழக்கங்கள் எழுப்பியும்  கருப்புத் தீபாவளி கடைப்பிடிக் கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில் நடைபெற்ற கருப்பு கொடி ஏற்றும் போராட்டத் தில் மாநிலத் தலைவர் எம்.சின்ன துரை எம்எல்ஏ, நாகப்பட்டினம் மாவட்டம் வாட்டாக்குடியில் நடை பெற்ற போராட்டத்தில் மாநிலப்  பொதுச் செயலாளர் வீ.அமிர்த லிங்கம், திருச்சி மாவட்டம் சிறு தாம்பூரில் மாநில பொருளாளர் அ. பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  தமிழ்நாடு முழுவதும் 300க்கும்  மேற்பட்ட மையங்களில், பத்தாயி ரத்திற்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்டு மோடி அரசுக்கு எதிராக கருப்புக்  கொடி ஏற்றி ஆவேச முழக்கமிட்டனர்.