states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மேட்டூர் அணை; 44.60 அடியாக நீர் உயர்வு

சென்னை, அக். 18 - தமிழக காவிரி நீர்ப்பி டிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் புத னன்று காலை 8 மணியள வில் 44.60 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6 ஆயிரத்து 846 கனஅடியாக குறைந்துள்ளது என்றாலும், கடந்த அக்டோபர் 10 அன்று 30 அடி மட்டுமே தண்ணீர் இருந்த நிலை மாறி, சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

ரயில்வே  ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்

புதுதில்லி, அக். 18 - லேகோ பைலட்டுகள், ரயில்வே கார்டுகள், ரயில்  நிலைய மேலாளர்,  கண்கா ணிப்பாளர், தொழில்நுட்ப நிபுணர்கள், உதவியா ளர்கள் உள்ளிட்ட  11.07  லட்சம் ரயில்வே ஊழி யர்களுக்கு 78 நாள் ஊதி யத்தை தீபாவளி போனசாக வழங்க ஒன்றிய அமைச்சர வை முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ. 1,968.87 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.

ஒன்றிய அரசு  ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு

புதுதில்லி, அக். 18 - ஒன்றிய அரசு ஊழி யர்கள் மற்றும் ஓய்வூதிய தாரர்களுக்கு 4 சதவிகித அக விலைப்படி உயர்வு வழங்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளி க்கப்பட்டுள்ளது.  இந்த அகவிலைப்படி உயர்வு 2023 ஜூலை 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படு மென்று தெரிகிறது.

‘சபரிமலை வரும் வாகனங்களில் அலங்காரம் கூடாது’

கொச்சி, அக்.18- சபரிமலைக்கு வரும் வாகனங்களில் அலங்காரம் செய்யக்கூடாது என கேரள உயர்நீதிமன்றம் தெரி வித்துள்ளது. சபரிமலைக்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள்  தேங்காய் பூ,  வாழைப்பழம், மலர் மாலை  களால்  அலங்கரிக்கப்பட்டு வருவது வழக்கமான காட்சி. அடுத்தமாதம் மண்டல மகர விளக்கு யாத்திரை தொடங்க உள்ள நிலையில் நீதிமன்ற த்தின் இந்த உத்தரவு வந்துள்ளது.

பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு? ஜம்மு எல்லையில் பதற்றம்

ஜம்முவின் ஆர்னியா பகுதி யில் சர்வதேச எல்லைக் கோடு அருகே செவ்வா யன்று எல்லை பாதுகாப்புப் படை  வீரர்கள் வழக்கமான பாது காப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் ராணுவத்தினர் இந்  திய நிலைகள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்திய ராணுவம் சார்பில் தக்க  பதிலடி கொடுக்கப்பட்ட நிலை யில், இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளதாகவும், காய மடைந்த இருவரும், மருத்துவ  சிகிச்சை பெற்று வருவதாகவும், இருவரது நிலைமை சீராக  இருப்பதாகவும் ராணுவம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனி டையே பாகிஸ்தான் தரப்பிலி ருந்து அத்துமீறி துப்பாக்கிச் சூடு  நடத்தப்பட்டால் அதற்கு தக்க  பதிலடி கொடுக்கும் வகையில்  எல்லையில் உள்ள ராணுவப்  படை வீரர்கள் உஷார்படுத்தப் பட்டுள்ளனர். இதனால் எல்லை யில் பதற்றம் நிலவி வருகிறது.

நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை, அக்.18- நீட் தேர்வுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்க உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டின் கல்வி உரிமையை யும், நம் மாணவர்களின் மருத்துவராகும்  கனவையும் சிதைத்து வருகிறது நீட்  தேர்வுக்கு முடிவு கட்டிட மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி  இணைந்து கடந்த ஆகஸ்ட் 20 ஆம்  தேதி நடத்திய உண்ணாநிலை அறப்போரை தொடர்ந்து, நீட் தேர்வுக்கு  எதிரான மாபெரும் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கவுள்ளோம். வரும் 21 ஆம் தேதி(சனிக்கிழமை) தமிழ்நாட்டின் அனைத்து கழக மாவட்டங்களிலும் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்திருக் கிறார்.

தீபாவளி சிறப்பு பேருந்து: அக். 28 ஆலோசனை கூட்டம்

சென்னை,அக்.18- தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சொந்த ஊர் செல்ல வசதியாக தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.  இந்த வருடம் பொதுமக்கள் நெரிசல்  இல்லாமல் பயணம் மேற்கொள்ள வசதியாக சிறப்பு பேருந்துகள் விடுவது  தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. தலைமை செயலகத்தில் நடை பெறும் இக்கூட்டத்தில் செயலாளர், அனைத்து போக்குவரத்து கழக நிர்வாக  துறை இயக்குநர்கள் கலந்து கொள் கிறார்கள்.சென்னையில் 5 பேருந்து  நிலையங்களில் இருந்து எந்தெந்த தேதியில் சிறப்பு பேருந்துகள்  இயக்கு வது குறித்து முடிவு செய்யப்படுகிறது. பொது போக்குவரத்து அதிகரித்து வரு வதால் கடந்த ஆண்டை விட கூடுத லாகபேருந்துகளை  இயக்க திட்டமிடப் பட்டுள்ளது.

நாவலூர் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, அக்.18- சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில்கள் பணி நடந்து வருகிறது. இந்த  நிலையில் பழைய மகாபலிபுரம் சாலை  நாவலூர் சுங்கச்சாவடி பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் துவங்கப்பட உள்ளது. இதையடுத்து அங்கு சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தென்சென்னை மக்கள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் நாவலூர் சுங்கச் சாவடியில் இன்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பாஷாவுக்கு இடைக்கால ஜாமீன்

சென்னை, அக்.18- கடந்த 1998 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல் உம்மா தலைவர் பாஷாவை முன்கூட்டியே விடுவிக்க கோரி அவரது மகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “29 ஆண்டுகளாக தனது தந்தை சிறையில் உள்ளார். குண்டுவெடிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட  குறைவான தண்டனை தனது தந்தை அனுபவித்து விட்ட நிலையில், தற்போது ஆயுள் தண்டனையை மட்டுமே அனுபவித்து வருகிறார்.  எனவே எனது தந்தையை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்.  வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக் கப்படும் வரை எனது தந்தைக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்” என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுந்தர் மோகன், சுந்தர் அமர்வில் விசார ணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறி ஞர் ஆஜராகி, இடைக்கால ஜாமீன் வழங்குவதில் அரசுக்கு ஆட்சேபனை இல்லை என கூறினார். இதையடுத்து, பாஷாவுக்கு 3 மாதங்களுக்கு இடைக் கால ஜாமீன் வழங்கிய நீதிபதிகள், வழக்கு குறித்து அரசு பதில் அளிக்க உத்தரவிட்டார்.

தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கு ஐ.நா. விருது

சென்னை, அக்.18- ஐ.நா சபையின் சிறந்த தொழில்  முதலீடு ஊக்குவிப்பு விருது, தமிழ்நாடு அரசின் தொழில் வழி காட்டி நிறுவனத்திற்கு வழங்கப் பட்டுள்ளது. அபுதாபியில் நடந்த  உலக முதலீட்டு மன்ற நிகழ்ச்சியில், அதற்கான விருதை, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன தலைமை செயல் அதிகாரி விஷ்ணு  பெற்றுக்கொண்டார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புதுப் பித்தக்க ஆற்றல் சார் முதலீடுகளை அதிகரிப்பதில் ஆற்றிய சிறப்பான பணிகளுக்காக ஐ.நா. அமைப்பின் மதிப்புமிகு ‘முதலீட்டு ஊக்குவிப்பு விருது-2023’-ஐப் பெற்றுள்ள தமிழ்நாடு அரசின் தொழில் வழி காட்டி நிறுவனத்திற்கு எனது பாராட்டுகள். தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதுமையான அணுகுமுறைகளும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் கொண்டுள்ள அர்ப்பணிப்பும் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை. அவை பசுமை யான எதிர்காலத்திற்கு உறுதியான ஈடுபாட்டை பறைசாற்றுவதாக அமைந்திருக்கின்றன.  இந்தப் பெருமைமிகு மைல் கல்லை அடைந்ததற்காக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,  தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குநர்  விஷ்ணு ஐ.ஏ.எஸ் மற்றும் கடுமை யாக உழைத்து வரும் அனைத்து உயர் அலுவலர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் பேர்வழி கைது

சென்னை, அக்.18- மும்பையை கலக்கிய பிரபல  போதைப்பொருள் கடத்தல்காரனை சென்னையில் மும்பை தனிப்படை காவலர்கள் கைது செய்தனர். மும்பையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ.20 கோடி மதிப்புடைய 20 கிலோ போதைப் பொருளை கடத்தியது தொடர்பாக லலித் பாட்டில் மற்றும் கூட்டாளிகள் கைது  செய்யப்பட்டனர். ரூ.130 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் என்ற போதை பொருளை, லலித் பாட்டில்  பயோடெக் கம்பெனியில் தயாரித்தது அம்பலமானது. சிறையில் இருந்து கொண்டே ஐபோன் மூலம், லலித் பாட்டில் போதை பொருள் சாம்ராஜ்யத்தை இயக்கியது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி  மும்பை சிறையில் இருந்து சிகிச்சை பெற மருத்துவமனை வந்த போது லலித் பாட்டில் தப்பியோடினார். குஜராத், கர்நாடகா மாநிலங்களில் தலைமறைவாக இருந்த லலித் பாட்டில், சென்னைக்கு வந்து பதுங்கி யிருந்த போது கைது செய்யப் பட்டார். லலித் பாட்டில் செல்போன் சிக்னலை வைத்து, மும்பை காவ லர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். கைது செய்யப்பட்ட லலித்  பாட்டில் “மியாவ்” மற்றும் “மிஸ்டர்  கேட்” என்ற பெயர்களில் பல்வேறு  நட்சத்திர பார்ட்டிகளில் பரிமாறப்படும் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்தார். லலித் பாட்டில் சென்னையில் பதுங்கி இருப்பதை அவரது செல்போன் சிக்னல் மூலம் காவ லர்கள் கண்டறிந்தனர். இதை யடுத்து மும்பை தனிப்படை காவலர்கள் சென்னையில் லலித் பாட்டிலை சுற்றி வளைத்து பிடித்து மும்பைக்கு அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.