states

img

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்

செங்கல்பட்டு, அக். 19- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக வியாழனன்று (அக். 19) மரண மடைந்தார். அவருக்கு வயது 82. இவர் பக்தர்களால் அம்மா என அழைக்கப்பட்டு வந்தார். தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் என்ற இடத்தில் ஆதி  பராசக்தி கோயில் அமைந்துள்ளது. இங்கு சித்தர் பீடத்தை நிறுவி ஆன்மிக குருவாகச் செயல்பட்டு வந்தவர் பங்காரு அடிகளார். இந்தக் கோவிலில் பெண்கள் பூஜிக்க அனுமதி உண்டு. மேலும் மாதவிடாய் காலங்களிலும் விலக்கு அளிக்காமல் அம்மனை தரிசிக்கலாம் என்ற நடைமுறை  உள்ளது எனக் கூறப்படுகிறது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பங்காரு அடிகளாருக்கு 2019ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.