சென்னை,மே 6- வீட்டுமனைப் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கிடவும், நீர்நிலைப் புறம்போக்குகளில் குடி யிருப்போர் வீடுகளை இடித்து காலி செய்வது, கோவில் நிலங்களில் குடியிருப்போர் வீடுகளுக்கு கூடுதல் வாடகை தீர்மானித்து கட்ட நிர்பந்தித்து வீடுகளை காலி செய்வது போன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் மே 6 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வருவாய்த்துறை அமைச்சர் மற்றும்இந்துஅறநிலையத்துறை அமைச்சர் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:
25 லட்சம் குடும்பங்கள்
தமிழ்நாட்டில் சுமார் 25 லட்சம் குடும்பங்கள் பல்வேறு வகையான அரசு புறம்போக்குகளில் வாழ்ந்து வருகின்றனர். நாளுக்கு நாள் நகர்மயம் வளர்ந்து வரும் சூழ்நிலையில் குடியிருப்பு பிரச் சனை நகர்ப்புறங்களில் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது. பல்லாயிரம் ஏழை எளிய நடுத்தர மக்கள் குறிப்பாக பட்டியலின, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வீடுகட்டி வாழ்ந்து வருகின்றனர். தமிழக அரசு இம்மக்களது குடியிருப்பு பிரச்சனை தொடர்பாக சிறப்பு திட்டத்தை உருவாக்கி செயல்படுத்திட வேண்டும். அதாவது, அனைவ ருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். ஏரிகள், குளங்கள், நீர்வழிகளின் அருகில் குடி யிருக்கும் மக்களை நீர்நிலைப் பாதுகாப்பு என்ற பெயரில் அவர்களது வீடுகளை இடித்து காலி செய்யும் நடவடிக்கை சமீப ஆண்டுகளாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. சிறுக சிறுக சேமித்து பல லட்சம் செலவழித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை ஒரு சில நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிவிட்டு அம்மக்களை நடுத்தெருவில் நிறுத்தும் அவல நிலைமை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இடிக் கப்பட்ட அந்த இடங்களில் நீர்நிலைகள் பாதுகாப்ப தற்கான எந்த ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வில்லை. அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி இந்த நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
நடைமுறை நிலை என்ன?
ஆவணங்களில் நீர்நிலை எனக் குறிப்பிடப் பட்டிருந்தாலும் உண்மையில் மக்கள் வாழும் இடங்களில் நீர்நிலை மற்றும் நீர் சேமிப்பு நடை முறையில் இல்லை என்பதை நீதிமன்றங்களும், அதிகாரிகளும் கவனிக்க மறுத்து வருகின்ற னர். சென்னை மாநகரத்திலும், தமிழகத்தின் பல இடங்களிலும் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங் கள், நீதிபதிகள் வீடுகள், அதிகாரிகளின் வீடுகள் அனைத்தும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. சென்னை மாநகரத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நகர்ப்புற வளர்ச்சி திட்டங் கள் செயல்படுத்தப்பட்டு ஏரிகள், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு பெரும் பங்களாக்கள் கட்டப்பட்டுள்ளன. இவ் வாறு இருக்கும்போது, ஏழை எளிய தினக்கூலி உழைப்பாளி மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்குவதும் அம் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் நிராத ரவாக கைவிடப்படுவதும் பெரும் கொடுமையாகும். தமிழக அரசு சமீபத்தில் நீர்நிலைகள் ஆக்கிர மிப்பு குறித்து ஆய்வு செய்து தெரிவிப்பதற்கு உயர்மட்டக்குழு அமைத்துள்ளது. இக்குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் வரை தமி ழகம் முழுவதும் நீதிமன்ற உத்தரவை காட்டி வீடு களை இடித்து காலி செய்வது, காலி செய்வதற் கான நோட்டிஸ்கள் விநியோகிப்பது உள்ளிட்ட வைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டு மென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென் பது அவசியமான ஒன்றாகும். ஆனால், நகர்ப்புற விஸ்தரிப்பு, வளர்ச்சி போன்ற காரணங்களால் சாகுபடி பரப்பளவு குறைக்கப்பட்டு ஏரி, குளங் கள் செயலற்று மண்மூடி உள்ளதையும் அரசு கணக்கில் கொள்ள வேண்டும்.
மேல்முறையீடு செய்க!
பல லட்சக்கணக்கானோரை பாதிக்கும் வகை யிலான நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்து மக்களின் குடியிருப்பு உரி மையை பாதுகாப்பதற்கு பதிலாக வீடுகளை இடித்து மக்களை வெளியேற்றுவதை நிறுத்த வேண்டும். இதில் பெரும்பகுதியானவர்கள் தாழ் த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பிற் படுத்தப்பட்டடோர் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, தமிழக அரசு கீழ்க்கண்ட நடவடிக்கை களை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். 1.நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து தெரிவிப்பதற்கு தமிழக அரசு அமைத் துள்ள உயர்மட்டக்குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் வரை, தமிழகம் முழுவதும் நீதிமன்ற உத்தரவை காட்டி வீடுகளை இடித்து காலி செய் வது, காலி செய்வதற்கு நோட்டீசுகள் விநியோகிப் பதை தடுத்து நிறுத்த வேண்டும். மக்களின் வாழ்வு ரிமையை பாதுகாத்திட தேவையான கொள்கை முடிவுகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். 2.பயன்பாடற்ற, நீண்டகாலமாக மக்கள் வசிக்கும் நீர்நிலை புறம்போக்குகளை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். 3.சொந்தமாக குடிமனை இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் குடிமனைப் பட்டா வழங்கு வதற்கு தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்து செயல் படுத்திட வேண்டும்.
4.தற்போதும் உண்மையில் நீர்நிலைகளாக உள்ள இடங்களில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் கொடுத்து அவர்கள் அங்கே வீடுகட்டி குடி யேறும் வரை, இருக்கும் இடத்திலிருந்து அப்புறப் படுத்தக் கூடாது என்றும், ஏழை நடுத்தர மக்கள் அரசால் கொடுக்கப்படும் மாற்று இடத்தில் வீடு கட்ட நிதி உதவி அளிக்க வேண்டும். 5.அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட கால மாக வீடுகட்டி வாழ்ந்து வரும் மக்களுக்கு, குடி யிருப்பு பிரச்சனை தொடர்பாக சிறப்பு திட்டத்தை உருவாக்கி அனைவருக்கும் வீடு வழங்கிட வேண்டும். இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களில் பல தலைமுறைகளாக வீடு கட்டி வாழ்ந்து வரும் மக்களுக்கு தற்போது வீட்டு வாடகை உயர்த்தப்பட்டுள்ளதோடு பழைய பாக்கி களை மொத்தமாக செலுத்த வேண்டுமென கட் டாயப்படுத்துவதுடன் செலுத்தவில்லையென் றால், வீடுகளை காலி செய்ய வேண்டுமென நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. கோயில்க ளில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருபவர்கள் இதுவரை செலுத்தியுள்ள வாடகை தொகை அந்த இடத்தின் மதிப்பை விட பலமடங்கு அதிகமாகும். மேலும், சமீப ஆண்டுகளில் கோயில்களின் வரு வாய் உயர்ந்துள்ள நிலையில், வாடகை தொகை யினை உயர்த்தி ஆக வேண்டுமென அவசியம் ஏதுமில்லை. மேலும், குடியிருப்போர், சிறுகடை வைத்திருப் போருக்கு வாடகை செலுத்தவில்லை என்ற காரணத்தினால் காலி செய்ய நோட்டீஸ் கொடுத்து நிர்பந்தப்படுத்தும் நடவடிக்கையினை உடன டியாக நிறுத்திட வேண்டும். இம்மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என வகைப்படுத்துவதை யும் அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.