states

குடியரசுத் தலைவரிடம் மன்னிப்புக் கோரி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம்!

புதுதில்லி, ஜூலை 31- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-விடம் மன்னிப்பு கோரி காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சி யின் மக்களவைக் குழுத் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சில நாட்களுக்கு முன்பு, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குடியரசுத் தலைவர் திரௌ பதி முர்மு-வை, ‘ராஷ்டிரபதி’ என்பதற்குப் பதிலாக ‘ராஷ்டிரபத்னி’ என்று குறிப்பிட் டார். இதுதொடர்பாக பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பிரச்சனையைக் கிளப்பியதுடன், சவுத்ரியின் பேச்சுக்காக அவரது கட்சியின் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பெரும் அமளியில் ஈடுபட்டனர். “குடியரசு தலைவரை அவமதிக்கும் எண்ணமில்லை, ‘ராஷ்டிரபத்னி’ என தவறு தலாக கூறிவிட்டேன்.

வேண்டுமானால் என்னை தூக்கிலிடுங்கள்: சோனியா காந்தியை ஏன் இதில் இழுக்கிறீர்கள்? குடி யரசுத் தலைவர் திரெளபதி முர்மு மனம் புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்க தயார்” என்று ஆதிர் ரஞ்சன் கூறியதையும் அவர்கள் கேட்கவில்லை. 2 நாட்களாக நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை பாஜக-வினர் முடக்கினர். “குடியரசுத் தலைவரை ‘ராஷ்டிர பத்னி’ என்று கூறியது, மிகவும் இழிவானது, பெண்களை அவமரியாதை செய்யும் விதத்தில் உள்ளது” என்று கூறிய தேசிய மக ளிர் ஆணையம், இதுதொடர்பாக, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகஸ்ட் 3-ஆம் தேதி காலை 11.30 மணிக்கு ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மன்னிப்புக் கோரி  காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார். அதில், “நான் தாங்கள் வகிக்கும் பதவி யை குறிப்பிட தவறான வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக வருத்தம் தெரி விக்கிறேன். அது நிச்சயமாக வாய்தவறி நடந்த நிகழ்வே என்று தெரிவித்துக்கொள் கிறேன். இருப்பினும் நான் மன்னிப்பு கோருகிறேன். எனது மன்னிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்” என்று குறிப் பிடப்பட்டுள்ளது.