5 மாநிலங்களில் பாஜகவிற்கு பலத்த அடி
புதுதில்லி, நவ.30- சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற ராஜஸ்தான், மத்தியப்பிர தேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வியாழனன்று மாலை வெளி யாகின. இதில் 5-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் மத்தி யப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் எனவும், ராஜஸ்தானில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என்றும், மிசோரத்தில் எதிர்க் க்கட்சியான ஜோரம் மக்கள் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெல்லும் எனவும் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் ஜி-20 தலைமை முடிவுக்கு வந்தது
புதுதில்லி, நவ. 30 - ‘ஜி-20’ கூட்டமைப்புக்கு, ஒவ்வொரு ஆண்டும் கூட்ட மைப்பிலுள்ள ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் தலைமை வகிக்கும். அந்த வகையில், 2023-ஆம் ஆண்டில் ‘ஜி-20’ அமைப்பு க்கு இந்தியா தலைமை வகித்தது. இதன் ஓராண்டு பதவிக்காலம் நவம்பர் 30- ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. டிசம்பர் 1 முதல் ‘ஜி-20’ கூட்டமைப்பு க்கு பிரேசில் தலைமை வகிக்கிறது.
யாத்திரையை 3-ஆம் முறையாக ஒத்திவைத்த அண்ணாமலை
சென்னை, நவ. 30 - ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைப்பய ணம் அறிவித்து, நடை பாதி - பயணம் பாதி என நடத்தி வரும் பாஜக தலைவர் அண்ணாமலை, அந்த நடை பயணத்தையும் 3-ஆவது முறையாக ஒத்தி வைத்துள் ளார். தற்போது டெல்டா பகுதியில் பயணம் மேற்கொ ண்ட அண்ணாமலை, இந்த முறை மழை அறிவிப்பை காரணமாகக் காட்டி, டிசம்பர் 5 வரை பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.
ஆவினில் ஊதா நிற பால் பாக்கெட் அறிமுகம்
சென்னை,நவ.30- ஆவினில் 200 மி.லிட்டர் ஊதா நிற பால் பாக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் சார்பில் கடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஊதா நிற பால் பாக்கெட்டுகள் இனி 200 மி.லி. அளவில் அனைத்து சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கும் என அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆவின் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஆவின் டிலைட் 200 மி.லி. பால் பாக்கெட்டுகள் வெள்ளிக் கிழமை (டிச.1) முதல் அறிமுகப் படுத்தப்படவுள்ளது. இந்த பால் பாக்கெட் ரூ.10-க்கு அனைத்து சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கும். மேலும் டிச.1 முதல் ஆவின் 500 மி.லி. டிலைட் பால் பாக்கெட்டுகள் ரூ. 21-க்கு மாதாந்திர பால் அட்டை கள் மூலம் அனைத்து வட்டார அலுவலகங்கள், ஆவின் பாலகங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப் படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை,நவ.30- தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்படும் சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார்’ விருது பெற விண்ணப் பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்தியில், சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார் விருது’, ஒவ்வொரு ஆண்டும், தமிழக முதல்வரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசு பணியாளர்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒருபகுதி யாக நிகழும் பட்சத்தில் நீங்க லாக) இவ்விருதினை பெறத் தகுதி யுடையவராவர். இவ்விருதானது, ஒரு சாதி, இனம், வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளை வகுப்புக் கலவரத்தில் போதோ அல்லது தொடரும் வன்முறையில் காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மன வலிமையை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. இவ்விருதானது மூன்று அளவு களில், தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே ரூ.20,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். 2024 ஆம் ஆண்டு, குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ள கபீர் புரஸ்கார் விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட https://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் மட்டுமே 15.12.2023 அன்று அல்லது அதற்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெற தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு, முதல்வரால் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று விருது வழங்கி கவுரவிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை குறைந்தது
சென்னை,நவ.30- சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.30 குறைந்து விற்பனையானது. தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வருகிறது. அதன்படி, சென்னையில் வியாழக்கிழமை(நவ.30) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,8655-க்கும், ஒரு சவரன் ரூ.46,920-க்கும் விற்பனை செய்யப் பட்டது. முன்னதாக புதன்கிழமை ஒரு கிராம் ரூ.5,870-க்கும், ஒரு சவரன் ரூ.46,960-க்கும் விற்பனை செய்யப் பட்டது.
ஆள்கடத்தல் வழக்கு: முன்னாள் எம்எல்ஏ வீட்டில் காவலர்கள் சோதனை
செங்கல்பட்டு,நவ.30- செங்கல்பட்டு அருகே ஆலப்பாக் கத்தில் வசித்து வருபவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கணிதா. இவரது கணவர் சம்பத்குமார். அதிமுகவின் காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். இந்த தம்பதியின் மகன் கோபி நாத்(28). இவர்கள் குடும்பத்துடன் ஆலம்பாக்கத்தில் வசித்து வருகின்ற னர். கணிதாவின் மகன் கோபிநாத் தும், செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த யாசர் என்பவரும், ஒன்றாக இணைந்து பர்னிச்சர் கடை நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கோபிநாத் கடந்த 11ஆம் தேதி யாசரை தனியார் இடத்தில் வைத்து 4 காசோலைகளில் ரூ.20 லட்சத்திற்கு கையெழுத்து வாங்கியுள்ளார். அத்தோடு, யாசருக்கு கோபிநாத் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து யாசர், கோபிநாத் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கோபி நாத் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்த செங்கல்பட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதனடிப்படையில் கணிதா வீட்டிலும் சோதனை நடத்தியதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
குஜராத்திலும் கள்ளச்சாராயப் புழக்கம்?
ஆயுர்வேத மருந்து அருந்திய 5 பேர் உயிரிழப்பு
பாஜக ஆளும் மாநிலங்களில் கள்ளச்சாராயம், போதைப் பொருள், கஞ்சா உள்ளிட்ட வைகளின் புழக்கம் நாளுக்குநாள் அதி கரித்து வருகிறது. சமீபத்தில் ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் கள்ளச் சாராயம் அருந்தி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், பாஜக வலுவாக உள்ள மற்றொரு மாநிலமான குஜராத் மாநிலத்தின் கெடா மாவட்டத் திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் தனது கிராம மக்களுக்கு “அசவா அரிஷ்டா” என்ற முத்திரையுடன் ஆயுர்வேத சத்து மருந்து (டானிக்) விற்றுள்ளார். இதனை வாங்கி குடித்த 7 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதில் 5 பேர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தனர். 2 பேர் கவ லைக்கிடமாக சிகிச்சை பெற்று வரு கின்றனர். உடற்கூராய்வின் முடிவில் 5 பேரின் உடலில் “ஆல்கஹால்” உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள் இருந்த தாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து, கள்ளச்சாராயம் தொடர்பான கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 43 பேரின் நிலை? ஆயுர்வேத சத்து மருந்து மொத்தம் 50 பேருக்கு விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய 7 பேரில், 5 பேர் உயிரிழந்து 2 பேர் கவலைக்கிடமாக உள்ள நிலை யில், மருந்து வாங்கிய மற்ற 43 பேர் நிலை என்னவென்பது குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
பிஆர்எஸ் - பாஜக தொண்டர்களுக்கு இடையே கைகலப்பு
119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் ஒரே கட்டமாக வியாழனன்று சட்ட மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜங்கான் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த போது, வாக்குச்சாவடி யில் ஆளும் பிஆர்எஸ் - பாஜக தொண்டர் களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. இந்த மோதலை தடுக்க வந்த போலீசார் மீதும் தொண்டர்கள் தாக்குதல் நடத்த முயன்ற தால், போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதேபோல ரங்காரெட்டி பகுதியில் பிஆர்எஸ் - காங்கிரஸ் தலைவர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டதை அடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட் டத்தை கலைத்தனர். தெலுங்கானாவில் தேர்தல் அறிவிப்பு வெளியான நாளி லிருந்து மாநிலம் முழுவதும் பெரும் பாலான இடங்களில் பிஆர்எஸ் - பாஜக - காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.